வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! | புஷ்பா 2 படத்தில் டேவிட் வார்னர்? |
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி விமர்சிக்கப்படுபவர் சமந்தா. அதற்கு அவரது தனிப்பட்ட வாழ்க்கை முக்கிய காரணமாக அமைந்துள்ளது. நாகசைதன்யாவைப் பிரிந்த பிறகு திடீர் திடீரென அவரை விமர்சிக்க ஒரு கூட்டம் கிளம்பி விடுகிறது. அவர்கள் நாகசைதன்யாவை எந்த விதத்திலும் விமர்சிப்பதில்லை.
இந்நிலையில் நேற்று மாலை திடீரென தத்துவார்த்தமாக ஒரு பதிவிட்டிருந்தார் சமந்தா. அதில், “என் மவுனத்தில் அறியாமைக்காக எப்போதும் தவறிழைக்காதே, என் அமைதி ஏற்றுக் கொள்வதற்கு, என் கருணை பலவீனத்திற்கு,” என்று குறிப்பிட்டிருந்தார். அடுத்து, “கருணைக்கு காலாவதி தேதி இருக்கலாம், சும்மா சொல்கிறேன்,” என பதிவிட்டிருந்தார்.
யாருக்கு, எதற்காக இப்படி சமந்தா பதிவிட்டுள்ளார் என்பது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.