பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை |

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் பிரபாஸ். 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களின் வெற்றிக்குப் பிறகு அவர் பான்-இந்தியா நடிகராக மாறிவிட்டார். அதற்குப் பிறகு அவர் நடித்து 2019ல் வெளிவந்த 'சாஹோ' படம் ஹிந்தியில் மட்டுமே வெற்றிப் படமாக அமைந்தது. தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளில் குறைவான வசூலைப் பெற்று தோல்வியைத் தழுவியது.
தற்போது நான்கைந்து பான்--இந்தியா படங்களில் நடித்து வரும் பிரபாஸின் அடுத்த படமாக 'ராதே ஷ்யாம்' படம் வரும் மார்ச் 11ம் தேதி பான்--இந்தியா படமாக வெளிவர உள்ளது. 1970களில் நடக்கும் காதல் கதையாக வெளிநாட்டை கதைக்களமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இந்தப் படம். படத்தின் டிரைலரைப் பார்ப்பவர்களுக்கு இது ஒரு 'எலைட்' படம் போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களும் மற்ற மொழிகளிலும் வசூலைக் குவிக்க அது அனைத்து ரசிகர்களுக்கமான படமாக இருந்தது முக்கிய காரணமாக அமைந்தது. 'சாஹோ' படத்தை 'ஸ்டைலிஷ் ஆக்ஷன்' படமாக உருவாக்கியதே அதன் சறுக்கலுக்குக் காரணம். இப்போது 'ராதே ஷ்யாம்' படம் 'ஸ்டைலிஷ் ரொமான்ஸ்' படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் 'ஏ' சென்டர்கள் தவிர மற்ற பி அன்ட் சி சென்டர்களில் எப்படி ஓடும் என்ற சந்தேகம் தெலுங்குத் திரையுலகில் கூட இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




