அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள், ஆனாலும்…. | புதிய தொழிலாளர் சங்கத்திற்கு ஆள் சேர்க்கும் தயாரிப்பாளர் சங்கம் | பிளாஷ்பேக் : நடிகையாக இருந்து டப்பிங் கலைஞராக மாறியவர் | பிளாஷ்பேக்: விஸ்வாமித்ரரை காப்பாற்றிய என்.எஸ்.கிருஷ்ணன் | 50 கோடிக்கு பேரம் பேசும் சிவகார்த்திகேயனின் பராசக்தி | ஓடிடி டீலிங் முடிந்த இட்லி கடை : என்ன விலை தெரியுமா? | 23 வருடங்களுக்கு பிறகு பிரசாந்த் - ஹரி கூட்டணி -அதிகாரப்பூர்வ அறிவிப்பு | விஜய்யின் ‛லியோ' பட சாதனையை முறியடித்த அஜித்தின் ‛குட் பேட் அக்லி' டிரைலர்! | பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் ‛கொம்பு சீவி' | சத்யராஜ் பாணியில் கதை தேடும் ‛மர்மர்' நாயகன் தேவ்ராஜ்! |
இசை ரசிகர்களை தங்களது மயக்கும் இசையால் கட்டிப் போட்டவர்கள் இசையமைப்பாளர்கள் இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான். இவர்கள் இருவரும் துபாயில் உள்ளனர். அங்கு இருவருமே இசை நிகழ்ச்சி நடத்தினர். இந்நிலையில் துபாயில் உள்ள ரஹ்மானின் இசை ஸ்டுடியோவுக்கு இளையராஜா சென்றார். இதுப்பற்றி ரஹ்மான் குறிப்பிடும்போது, ‛‛'பிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு மேஸ்ட்ரோவை(இளையராஜா) வரவேற்பதில் மகிழ்ச்சி; எங்கள் ஸ்டூடியோவுக்காக அவர் இசை அமைப்பார் என நம்புகிறேன்' என்றார்.
இதற்கு பதிலளித்துள்ள இளையராஜா, ‛‛ரஹ்மான் கோரிக்கை ஏற்கப்பட்டது. விரைவில் இசையமைப்பு தொடங்கும்'' என்றார்.
ஒருகாலத்தில் இளையராஜாவின் இசை குழுவில் பணியாற்றினார் ரஹ்மான். இன்று ஆஸ்கர் உள்ளிட்ட விருதுகளை வென்று தற்போது உலகமே திரும்பி பார்க்கும் இசையமைப்பாளராக வலம் வருகிறார்.