துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
அருவி படம் மூலம் புகழ் வெளிச்சத்திற்கு வந்த நடிகை அதிதி பாலன் மலையாளத்தில் படவேட்டு என்கிற படத்தில் நடித்து வருகிறார். மலையாள முன்னணி நடிகர் நிவின்பாலி கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் மஞ்சுவாரியர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். லிஜு கிருஷ்ணா என்பவர் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். துல்கர் சல்மானுடன் செகண்ட் ஷோ படத்தில் இணைந்து அறிமுகமான நடிகர் சன்னி என்பவர் இந்த படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்துவிட்டது.
இந்தநிலையில் இந்த படத்தின் இயக்குனர் லிஜு கிருஷ்ணா மீது படக்குழுவை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்ததன் பேரில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இந்த எதிர்பாராத நடவடிக்கையால் ஸ்தம்பித்து போன படக்குழுவினர் தற்காலிகமாக படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளனர். இந்த வருடம் இந்த படத்தை ரிலீஸ் செய்து விடலாம் என்கிற முனைப்பில் வேலைகளை கவனித்து வந்த தயாரிப்பாளர் சன்னி வெய்ன், இந்த விஷயத்தை எப்படிக் கையாள்வது என திரையுலகில் உள்ள முக்கியஸ்தர்களிடம் பேசி வருகிறாராம்.