பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
கடந்த 15 வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் மம்முட்டி நடித்த பிக்-பி என்கிற கேங்ஸ்டர் படத்தை இயக்கியவர் இயக்குனர் அமல் நீரத். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் மம்முட்டியை வைத்து பீஷ்ம பர்வம் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் மார்ச்-3ல் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த படத்தில் இடம்பெறும் சில காட்சிகளை ரசிகர்கள் தங்கள் மொபைல்போனில் படம் பிடித்து அவற்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இது இயக்குனர் அமல் நீரத்தை ரொம்பவே அப்செட் ஆக்கியுள்ளது.
உடனே இது குறித்து ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் விதமாக, 'ரசிகர்கள் இந்த படத்தை தியேட்டருக்கு வந்து பார்த்து என்ஜாய் செய்து ரசியுங்கள், அதேசமயம் தயவுசெய்து யாரும் படக்காட்சிகளை மொபைல் போனில் பதிவு செய்வதோ அவற்றை சோசியல் மீடியாவில் பரப்புவதோ செய்ய வேண்டாம் என வேண்டுகோள் வைக்கிறேன்... கொரோனா தாக்கம் நிலவிய இந்த இரண்டு வருட காலத்தில் இந்த படத்தை எடுத்து முடிக்க நாங்கள் மிகப்பெரிய உழைப்பை கொடுத்திருக்கிறோம். தயவுசெய்து அதை வீணடித்து விட வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.