விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு | நவம்பர் 28ல் ரீ-ரிலீஸ் ஆகும் ‛அஞ்சான்' | பிளாஷ்பேக்: ஏ வி எம் - விஜயகாந்த் கூட்டணியின் முதல் வெற்றித் திரைப்படம் “சிவப்பு மல்லி” | எங்கேயும் போக மாட்டேன், 13 வருட காத்திருப்பு போதும் : இயக்குனருக்கு உறுதி அளித்த பார்வதி | ரஜினி, தனுஷுக்கு அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை பார்க்கிறேன் ; நாகார்ஜுனா | 'ஏஜென்ட் மிர்ச்சி' ; ஸ்ரீ லீலாவின் முதல் பாலிவுட் பட லுக் வெளியானது | ‛அங்கமாலி டைரீஸ்' பட இயக்குனரின் ஹிந்தி படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர் ரஹ்மான் | ராஜா சாப் பட இயக்குனருக்கு விஎப்எக்ஸ் சூப்பர்வைசர் மிரட்டல் ; தயாரிப்பாளர் வெளியிட்ட பகீர் தகவல் | இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் |
ஹிந்தித் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அனன்யா பான்டே. 'ஸ்டூடன்ட் ஆப் த இயர் 2' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதற்கடுத்து 'பதி பத்னி அவுர் ஓ, காலி பீலி' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தற்போது தெலுங்கு, ஹிந்தியில் உருவாகி வரும் 'லிகர்' படம் மூலம் தென்னிந்தியத் திரையுலகிலும் அறிமுகமாக உள்ளார். சில நாட்களுக்கு முன்பு போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் மும்பையில் அனன்யா வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அதனால், செய்திகளில் பரபரப்பாக இடம் பெற்றார்.
இதனிடையே, வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள புதிய படத்தில் அனன்யாவை கதாநாயகியாக நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார்கக்ளாம். ஆனால், போதைப் பொருள் சோதனையை அடுத்து அந்த எண்ணத்தை கைவிட்டதாக செய்திகள் வெளியாகின.
இது குறித்து அனன்யா பான்டே சமீபத்தி பேட்டி ஒன்றில், “என்னை முதலில் அந்தப் படத்திற்காக யாரும் தொடர்பு கொள்ளவே இல்லை. அப்புறம் என்னை எப்படி அந்தப் படத்திலிருந்து நீக்க முடியும்,” என கேள்வி எழுப்பியுள்ளார்.