ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பொறியாளன் படத்தால் ஓரளவு தெரிந்த நபரான ஹரிஷ் கல்யாண், பிக்பாஸ் மூலம் பிரபலமானார். தற்போது, தாராளபிரபு, கசடதபற, ஓ மணப்பெண்ணே படங்கள் மூலம் கோலிவுட்டில் தனக்கான இடத்தை பிடிக்கவும் தக்கவைக்கவும் முயன்று வரும் ஹரீஷ் கல்யாண் அளித்த பேட்டி:
ஓ மணப்பெண்ணே எந்த மாதிரி படம்... திருப்தியாக இருந்ததா?
ரொம்ப யதார்த்தமான படம். தெலுங்கில்வெளியான பெல்லி சூப்புலு படத்தின் ரீமேக் இது. முகம் சுளிக்காமல் பார்க்கும்வகையில், நேர்மையான ரீமேக்காக எடுத்துள்ளோம்.
மக்களிடம் ஹரீஷ் கல்யாண் எந்த மாதிரி அடையாளப்பட விரும்புகிறீர்கள்?
நிஜ வாழ்க்கையில் இருப்பதை கதையில் பார்க்கும் போது, அது உடனே கனெக்ட் ஆகிவிடும். ஓ மணப்பெண்ணே படத்தின் நாயகனை போலவே நானும் நிஜத்தில் இருந்துள்ளேன். மக்களுடன் இணைக்கும் விதமான பாத்திரங்களில் அதிகம் நடிக்க வேண்டும். நம்ப பையன் பா இவன்... என மக்கள் சொல்ல வேண்டும்.
அந்த மாதிரி எனக்கு தெரியவில்லை. மூன்றுமே வெவ்வேறு படங்களே. கசடதபற படம் இதுவரை நான் நடிக்காத பாத்திரம்.
- நமது நிருபர் --