பொங்கல் நாள் வாழ்த்துகளைக் குவித்த படங்கள் | ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ் | ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' |

திருவிதாங்கூர் சகோதரிகள் என்ற பெயரில் நடனம் மட்டுமே ஆடிவந்தனர் லலிதா, பத்மினி, ராகினி சகோதரிகள். இவர்கள் நடனத்திற்கென்று தனி ரசிகர் வட்டம் இருந்ததால் கதைக்கு சம்பந்தம் இல்லை என்றாலும் இவர்களது நாட்டியம் படங்களில் இடம்பெற்றது. திருவிதாங்கூர் சகோதரிகளின் நாட்டியம் இடம்பெற்ற படம் என்று விளம்பரமும் செய்யப்பட்டது.
சகோதரிகள் மூன்று பேருக்குமே படத்தில் நடிக்கும் ஆசை இருந்தாலும் அது அவர்களுக்கு வாய்ப்பாக அமையவில்லை; தொடர்ந்து நடனம் ஆடவே அழைக்கப்பட்டார்கள். இந்த நிலையில் 1950ம் ஆண்டு வெளிவந்த 'ஏழை படும் பாடு' படத்தில் பத்மினியும் ராகினியும் ஹீரோயின் ஆனார்கள். லலிதா - அஞ்சலா என்ற கேரக்டரிலும், பத்மினி - லட்சுமி என்ற கேரக்டரிலும் நடித்தனர். வி நாகையா, சேருகளத்தூர் சாமா, டி.எஸ். பாலையா, வி. கோபாலகிருஷ்ணன், டி.எஸ். துரைராஜ் மற்றும் 'லக்ஸ் சோப் பியூட்டி' குமாரி என். ராஜம். ஆகியோரும் நடித்திருந்தனர். எஸ்.எம். சுப்பையா நாயுடு இசையமைத்தார்.
திருந்தி வாழ நினைக்கும் ஒரு திருடனுக்கும் கொடூர போலீஸ் அதிகாரிக்கும் இடையிலான கதை. ஜாபர்ட் என்ற அந்த போலீஸ் கேரக்டரில் சீதாராமன் நடித்திருந்தார். அவரது நெகட்டிவ் கேரக்டர் பெரிதும் ஈர்க்கப்பட்டதால் பின்னர் அவர் ஜாபர்ட் சீதாராமன் என்று அழைக்கப்பட்டார்.