பாலிவுட்டுக்கு போன வேகத்திலேயே காதல் கிசுகிசுவில் சிக்கிய ஸ்ரீ லீலா! | ரேஸில் விபத்தில் சிக்கிய அஜித் கார்! | வெற்றிமாறன் தயாரித்த ‛பேட் கேர்ள்' படத்தின் டீசரை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு | 43வது பிறந்தநாளில் பிரியங்கா சோப்ரா வெளியிட்ட பிகினி புகைப்படம்! | ‛இளைய தளபதி' பட்டத்துக்கு சொந்தக்காரன் நான்தான்! நடிகர் சரவணன் பரபரப்பு தகவல் | வீட்டுக்குள் புகுந்த பாம்பை தானே பிடித்த நடிகர் சோனு சூட்! | தனுஷ் பிறந்த நாளில் தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகும் ‛மயக்கம் என்ன' | பேண்டஸி காதல் ஜானரில் உருவாகும் கவின் 9வது படம்! | ‛கில்லர்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | மீண்டும் ஹீரோவாக ஆக்சன் கிங் அர்ஜுன்! |
திருவிதாங்கூர் சகோதரிகள் என்ற பெயரில் நடனம் மட்டுமே ஆடிவந்தனர் லலிதா, பத்மினி, ராகினி சகோதரிகள். இவர்கள் நடனத்திற்கென்று தனி ரசிகர் வட்டம் இருந்ததால் கதைக்கு சம்பந்தம் இல்லை என்றாலும் இவர்களது நாட்டியம் படங்களில் இடம்பெற்றது. திருவிதாங்கூர் சகோதரிகளின் நாட்டியம் இடம்பெற்ற படம் என்று விளம்பரமும் செய்யப்பட்டது.
சகோதரிகள் மூன்று பேருக்குமே படத்தில் நடிக்கும் ஆசை இருந்தாலும் அது அவர்களுக்கு வாய்ப்பாக அமையவில்லை; தொடர்ந்து நடனம் ஆடவே அழைக்கப்பட்டார்கள். இந்த நிலையில் 1950ம் ஆண்டு வெளிவந்த 'ஏழை படும் பாடு' படத்தில் பத்மினியும் ராகினியும் ஹீரோயின் ஆனார்கள். லலிதா - அஞ்சலா என்ற கேரக்டரிலும், பத்மினி - லட்சுமி என்ற கேரக்டரிலும் நடித்தனர். வி நாகையா, சேருகளத்தூர் சாமா, டி.எஸ். பாலையா, வி. கோபாலகிருஷ்ணன், டி.எஸ். துரைராஜ் மற்றும் 'லக்ஸ் சோப் பியூட்டி' குமாரி என். ராஜம். ஆகியோரும் நடித்திருந்தனர். எஸ்.எம். சுப்பையா நாயுடு இசையமைத்தார்.
திருந்தி வாழ நினைக்கும் ஒரு திருடனுக்கும் கொடூர போலீஸ் அதிகாரிக்கும் இடையிலான கதை. ஜாபர்ட் என்ற அந்த போலீஸ் கேரக்டரில் சீதாராமன் நடித்திருந்தார். அவரது நெகட்டிவ் கேரக்டர் பெரிதும் ஈர்க்கப்பட்டதால் பின்னர் அவர் ஜாபர்ட் சீதாராமன் என்று அழைக்கப்பட்டார்.