ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

நேரம், பிரேமம் என இரண்டு வெற்றிப்படங்களை இயக்கியவர் மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். பிரேமம் படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானாலும் கூட, அந்தப்படம் வெளியாகி சுமார் 5 வருடங்கள் எந்தப்படமும் இயக்காமல் இருந்த அல்போன்ஸ் புத்ரன், பஹத் பாசில் - நயன்தாராவை இணைத்து பாட்டு என்கிற படத்தை இயக்கப் போவதாக கடந்த வருடம் அறிவித்தார்.
ஆனால் சில காரணங்களால் பாட்டு படத்தை தள்ளிவைத்து விட்ட அல்போன்ஸ் புத்ரன், பிரித்விராஜூக்காக தயார் செய்து வைத்திருந்த கதை ஒன்றை அவரிடம் சொல்லி, அவரிடம் சம்மதம் பெற்று அந்தப்படத்தை இயக்கப்போவதாக அறிவித்தும் விட்டார். கதையும் ஹீரோவும் மாறினாலும் நாயகி என்னவோ நயன்தாரா தான்.
இந்தநிலையில் இந்தப்படத்திற்கு கோல்டு என டைட்டில் வைத்துள்ளாராம் அல்போன்ஸ் புத்ரன். தற்போது மோகன்லாலை வைத்து பிரித்விராஜ் இயக்கிவரும் ப்ரோ டாடி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும், இந்தப்படத்தின் படப்பிடிப்பை செப்டம்பர் மாதத்திலேயே துவங்க இருக்கிறாராம்.




