70வது பிலிம்பேர் விருதுகள் - அதிக விருதுகளை வென்ற 'அமரன்' | இது கமல் ரஜினி பட கணக்கு | சிறிய பட்ஜெட் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி! | ‛கல்கி 2898 ஏ.டி' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | பிரதீப் ரங்கநாதன் இயக்குனருடன் கைகோர்க்கும் சிம்பு! | அட..டா... மதுரை சாப்பாடு: அமீனா ரபீக் ஆனந்தம் | விஸ்மாயா மோகன்லால் கதாநாயகியாக அறிமுகமாகும் தொடக்கம் படப்பிடிப்பு நிறைவு | என்னுடைய படம் பார்க்க தனுஷ் வந்தது ஏன் ? ; மிருணாள் தாக்கூர் வெளிப்படை பதில் | சிறை எனக்கு ஐந்தாம் வீடு போல ; ஜாமினில் விடுதலையான இயக்குனர் விக்ரம் பட் விளக்கம் | ‛கேஜிஎப்' இசையமைப்பாளருக்கு 35 லட்சம் மதிப்புள்ள கோல்டு வாட்ச் பரிசளித்த விஸ்வக் சென் |

நேரம், பிரேமம் என இரண்டு வெற்றிப்படங்களை இயக்கியவர் மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். பிரேமம் படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானாலும் கூட, அந்தப்படம் வெளியாகி சுமார் 5 வருடங்கள் எந்தப்படமும் இயக்காமல் இருந்த அல்போன்ஸ் புத்ரன், பஹத் பாசில் - நயன்தாராவை இணைத்து பாட்டு என்கிற படத்தை இயக்கப் போவதாக கடந்த வருடம் அறிவித்தார்.
ஆனால் சில காரணங்களால் பாட்டு படத்தை தள்ளிவைத்து விட்ட அல்போன்ஸ் புத்ரன், பிரித்விராஜூக்காக தயார் செய்து வைத்திருந்த கதை ஒன்றை அவரிடம் சொல்லி, அவரிடம் சம்மதம் பெற்று அந்தப்படத்தை இயக்கப்போவதாக அறிவித்தும் விட்டார். கதையும் ஹீரோவும் மாறினாலும் நாயகி என்னவோ நயன்தாரா தான்.
இந்தநிலையில் இந்தப்படத்திற்கு கோல்டு என டைட்டில் வைத்துள்ளாராம் அல்போன்ஸ் புத்ரன். தற்போது மோகன்லாலை வைத்து பிரித்விராஜ் இயக்கிவரும் ப்ரோ டாடி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும், இந்தப்படத்தின் படப்பிடிப்பை செப்டம்பர் மாதத்திலேயே துவங்க இருக்கிறாராம்.




