பிளாஷ்பேக்: பல்வேறு சிறப்பிற்கும், புதுமைக்கும் புகலிடமாய் அமைந்த பைந்தமிழ் திரைக்காவியம் “பாவமன்னிப்பு” | மூன்றாவது முறையாக கிருஷ்ணாவுக்கு ஜோடியான பிந்து மாதவி | மணிரத்னம் படத்தில் இணையும் விஜய் சேதுபதி, சாய் பல்லவி | கோவில் திருவிழாவில் பங்கேற்றதால் சலசலப்பு ; அழகான விளக்கம் கொடுத்த அன்னா பென் | இப்போது வரை என் படங்களை என் குழந்தைகள் பார்க்கவில்லை ; ஷாலினி அஜித் | வெங்கடேஷ் படத்திற்காக தெலுங்கில் நுழைந்த யோகி பாபு | சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா இணைந்து நடிப்பார்களா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு | தாய் கிழவி : நீண்ட இடைவெளிக்குப் பின்…. | ஆஞ்சநேயர் பிறந்த ஊரில் பூஜையுடன் துவங்கிய 'ஜெய் ஹனுமான்' | தனுஷை குறிப்பிட்டு பேசிய சிவகார்த்திகேயன் : கொச்சியில் நடந்தது என்ன? |

நாகார்ஜுனா தற்போது தெலுங்கில் வைல்டு டாக் என்கிற படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனரான சாலமன் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஏசிபி விஜய் வர்மா என்கிற ஒரு ரப் அன்ட் டப் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் நாகார்ஜூனா. இந்தப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி இருக்கிறது. நடிகர் சிரஞ்சீவி இதை வெளியிட்டுள்ளார்.
அதற்கு முன்னதாக சிரஞ்சீவிக்கும் மகேஷ்பாபுவுக்கும் இந்தப்படத்தின் டீசரை அனுப்பி வைத்துள்ளார் நாகார்ஜுனா. இருவருமே பார்த்துவிட்டு பாராட்டியதை, தான் அவர்களுடன் பேசியதை வாட்ஸ் அப் ஸ்க்ரீன் ஷாட்டுகளாக அவர்களின் அனுமதி பெற்று தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நாகார்ஜுனா.
டீசர் பற்றி மகேஷ்பாபு கூறும்போது, “இப்போதுதான் டீசர் பார்த்தேன்.. பார்ப்பதற்கே பயங்கரமாக இருக்கிறது. அதேசமயம் கூலாகவும் இருக்கிறது” என கூறியுள்ளார்.
சிரஞ்சீவியும், “டீசர் வித்தியாசமான முறையில் எடிட் பண்ணப்பட்டு இருக்கிறது. படம் பார்ப்பதற்கு ஆர்வத்தை தூண்டுகிறது. நாளை இதை வெளியிடுகிறேன்” என கூறியுள்ளார்