'லோகா 2' படப்பிடிப்பு எப்போது? அப்டேட் கொடுத்த கல்யாணி பிரியதர்ஷன் | ஏ.ஐ., படிக்கிறாரா சிம்பு? | மை லார்ட் வெற்றி படமா... சசிகுமார் பேசியது என்ன? | இன்ஸ்டா பாலோயர்கள் வைத்து தான் சம்பளமா... : ஷா ரா புலம்பல் | சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? | படப்பிடிப்புக்கு முன்பே ஒரு மில்லியன் ரீல்களை எட்டிய 'ஏஏ23' தீம் | பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நித்யா மேனன்! | நண்பர்களுடன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்த சிவகார்த்திகேயன்! | சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மஹத் ராகவேந்திரா | துருவ் விக்ரம் அடுத்த படத்தை குறித்து புதிய தகவல் இதோ |

எந்த மாநிலமாக இருந்தாலும் போக்குவரத்து விதிகளை மீறுவது, குறிப்பாக ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது சர்வ சாதாரணமாகி விட்டது. குறிப்பாக ஆந்திர போக்குவரத்து போலீஸார் இதற்காக என்னவெல்லாமோ விழிப்புணர்வு விஷயங்களை அமல்படுத்தியும் ஹெல்மெட் அணிவதை பெரிய அளவில் செயல்படுத்த முடியவில்லை. இந்தநிலையில் முன்னணி ஹீரோவான மகேஷ்பாபுவை வைத்து வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி எடுத்துள்ளனர்.
அதாவது பரத் ஆனே நேனு என்கிற படத்தில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கும் முதல்வராக நடித்திருந்தார் மகேஷ்பாபு. அப்படிப்பட்டவர் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தினால், வாகன ஓட்டிகள், குறிப்பாக அவரது ரசிகர்களாவது அதை பின்பற்றுவார்கள் என நினைத்தனர் போக்குவரத்து போலீஸார். அதன்படி மகேஷ்பாபு ஹெல்மெட் அணிந்தபடி வண்டி ஓட்டுவது போன்ற புகைப்படத்தை வைத்து ஹெல்மெட்டின் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றனர்.




