இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
தெலுங்கு திரையுலகில் பிரபல சீனியர் நடிகரான மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு, தற்போது கண்ணப்பா என்கிற புராண படத்தை தயாரித்து அதில் கதாநாயகனாக நடித்து வருகிறார். முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ளார். படம் ஜூன் 27ம் தேதி வெளியாக இருக்கிறது. பான் இந்திய படமாக இது உருவாகியுள்ளது. அதற்கேற்றபடி மலையாளத்தில் இருந்து மோகன்லால், பாலிவுட்டில் இருந்து அக்ஷய் குமார் மற்றும் தெலுங்கில் இருந்து நடிகர் பிரபாஸ் ஆகியோர் மூன்று முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களது கதாபாத்திரம் கேமியோ என்று சொல்லும் அளவிற்கு சில நிமிடங்களே வந்து போகும் விதமாகத்தான் உருவாக்கப்பட்டிருந்தது என்று சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் நடிகர் விஷ்ணு மஞ்சு இந்த மூவரும் படத்தில் எவ்வளவு நேரம் இடம் பெறுகிறார்கள் என்கிற விஷயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அந்த வகையில் இந்த படத்தில் ருத்ரா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் பிரபாஸ் 15லிருந்து 20 நிமிடங்கள் வரை திரையில் தோன்றுகிறாராம். குறிப்பாக கடைசி ஐம்பது நிமிட காட்சிகளில் இவரது கதாபாத்திரம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்குமாம். அதேபோல கிராதா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள மோகன்லால் படத்தில் 15 நிமிட காட்சிகளில் வருகிறார் என்றும், சிவன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அக்ஷய் குமார் பத்து நிமிடங்கள் வந்து போகிறார் என்றும் கூறியுள்ளார் நடிகர் விஷ்ணு மஞ்சு.