கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல் | ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா? | விபத்தில் சிக்கியதாக பரவிய வதந்தி: விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்த காஜல் அகர்வால் | அனுமதியின்றி தன் பெயர், படத்தை பயன்படுத்தக்கூடாது: ஐஸ்வர்யா ராய் வழக்கு | சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க போகும் 3 படங்கள் விபரம் | பிரபாஸ் பிறந்தநாளில் ‛தி ராஜா சாப்' படத்தின் முதல் பாடல் | செப்., 13ல் இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பிரமாண்ட பாராட்டு விழா | அல்லு அர்ஜூனை பார்த்து வியந்த ‛டிராகன்' பட இயக்குனர் | தன் முதல் தமிழ் படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய அனஸ்வரா ராஜன் | கல்கி 2ம் பாகத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா ? கல்யாணி பிரியதர்ஷன் ஆர்வம் |
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புராவை சேர்ந்தவர் ஷோபிதா(வயது 30). இவர் கன்னட திரைஉலகில் அறிமுகமாகி ஜாக்பாட், அபார்ட்மெண்ட் டூ மர்டர், வந்தனா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜனப்பிரியா, பிரம்மகுண்டு சித்தப்பா, மங்களகௌரி, கோகிலே, பிரம்மகந்து, கிருஷ்ண ருக்மணி, மனேதேவா உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட சின்னத்திரை தொடர்களிலும் நடித்து பிரபலம் அடைந்தார். பின்னர் அவர் டி.வி.க்களில் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வந்தார்.
கடந்த ஆண்டு சிவண்ணா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் ஷோபிதா தனது கணவர் சிவண்ணாவுடன் ஐதராபாத்தில் குடியேறினார். நேற்று முன்தினம் அவர் தனது வீட்டில் சிரித்து மகிழ்ந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் தான் வசித்து வந்த ஐதராபாத் வீட்டில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? கொலை செய்யப்பட்டாரா என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.