'காந்தி டாக்ஸ்' முதல் 'வித் லவ்' வரை... இந்த வார ஓடிடி வெளியீடுகள்.. | வருங்கால கணவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்! மீனாட்சி சவுத்ரி வெளியிட்ட தகவல் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: 'துரந்தர்- 2' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது | ஜான்வி கபூரின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட பெத்தி பட போஸ்டர்! | யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது! | ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' |

கேரளாவில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை பலத்த புயலை கிளப்பி உள்ளது. தோண்ட தோண்ட வரும் பூதம்போல பாலியல் புகார்கள் குவிந்து கொண்டு வருகிறது. இதை தொடர்ந்து தென்னிந்திய மாநிலங்களில் ஹேமா கமிட்டி போன்ற கமிட்டி அமைத்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் கன்னட திரையுலககை சேர்ந்த 153 நடிகர், நடிகைகள் கையெழுத்திட்டு கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
அந்த கடிதத்தில் அவர் கூறப்பட்டிருப்பதாவது : நீதிபதி ஹேமா குழு அறிக்கையில், மலையாள திரைத்துறையில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொல்லைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல் கன்னட திரைத்துறையில் நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல்கள் குறித்து உடனடியாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.
கன்னட திரைத்துறையில் நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் குறித்தும், பெண்களுக்கு பாதுகாப்பான, சமமான பணி சூழலை உருவாக்க தேவையான கொள்கைகளை வகுக்க வேண்டும் என்பது குறித்த விஷயங்களிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும். 3 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும். அந்த அறிக்கையில் கூறப்படும் அம்சங்கள் பகிரங்கப்படுத்தப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




