லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
பிரபல பாலிவுட் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் தென்னிந்திய மொழி திரைப்படங்கள் மீது தனிப்பிரியம் கொண்டவர். தமிழில் நல்ல படங்கள் வரும்போது தனது பாராட்டுகளை தவறாமல் தெரிவித்து வருபவர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்த இமைக்கா நொடிகள் என்கிற படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு அறிமுகமானார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியான லியோ திரைப்படத்தில் ஒரு நிமிடமே வந்து போகும் காட்சியில் நடித்திருந்தார். அதையடுத்து தற்போது சுந்தர்.சியுடன் 'ஒன் டூ ஒன்' என்கிற படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அடுத்ததாக மலையாள திரையுலகிலும் அடி எடுத்து வைக்கிறார் அனுராக் காஷ்யப். கடந்த சில நாட்களாக கேரளாவில் நடைபெற்று வரும் கேரள சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று வரும் அனுராக் காஷ்யப் கேரளா மீடியாக்களிடம் பேசும்போது, “நான் மலையாள படம் ஒன்று நடிக்க இருக்கிறேன். வரும் ஜனவரி மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. படத்தின் இயக்குனரிடம் நான் என்ன கதாபாத்திரம் செய்கிறேன் என்றெல்லாம் கேட்கவில்லை. ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.