தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் | சூர்யா தெலுங்கில் நடிக்கும் படம் பிரித்விராஜ் படத்தின் தழுவலா ? | சூரி படத்தில் காமெடியனாக நடிக்க வேண்டும் : யோகி பாபு விருப்பம் | அல்லு அர்ஜுன் படத்திற்கு அனிருத் சம்பளம் எவ்வளவு தெரியுமா... | 15வது திருமணநாள் : மனைவிக்கு காஸ்ட்லி கார் பரிசளித்த அல்லு அர்ஜுன் | துரந்தர் 2 தெலுங்கு பதிப்பில் இடம் பெறும் ஹிந்தி பாடல்கள் | விஜய் குறித்து நான் அப்படி பேசவில்லை : சர்ச்சைக்கு விளக்கம் அளித்த லட்சுமி ராமகிருஷ்ணன் | துரந்தர் 2 டிரைலர் : 5 மொழிகளில் 65 மில்லியன் பார்வைகள் | 50ஐக் கடந்தது 2026 ரிலீஸ் : இந்த வாரமும் 5 படங்கள் ரிலீஸ் | வெற்றி விழாவுக்கு தயாராகும் தாய்கிழவி படக்குழு |

பிரபல பாலிவுட் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் தென்னிந்திய மொழி திரைப்படங்கள் மீது தனிப்பிரியம் கொண்டவர். தமிழில் நல்ல படங்கள் வரும்போது தனது பாராட்டுகளை தவறாமல் தெரிவித்து வருபவர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்த இமைக்கா நொடிகள் என்கிற படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு அறிமுகமானார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியான லியோ திரைப்படத்தில் ஒரு நிமிடமே வந்து போகும் காட்சியில் நடித்திருந்தார். அதையடுத்து தற்போது சுந்தர்.சியுடன் 'ஒன் டூ ஒன்' என்கிற படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அடுத்ததாக மலையாள திரையுலகிலும் அடி எடுத்து வைக்கிறார் அனுராக் காஷ்யப். கடந்த சில நாட்களாக கேரளாவில் நடைபெற்று வரும் கேரள சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று வரும் அனுராக் காஷ்யப் கேரளா மீடியாக்களிடம் பேசும்போது, “நான் மலையாள படம் ஒன்று நடிக்க இருக்கிறேன். வரும் ஜனவரி மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. படத்தின் இயக்குனரிடம் நான் என்ன கதாபாத்திரம் செய்கிறேன் என்றெல்லாம் கேட்கவில்லை. ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.




