26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு |

மலையாள திரையுலகில் பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக பிசியாக நடித்து வருபவர் சுராஜ் வெஞ்சாரமூடு. இவர் நேற்று முன் தினம் தனது காரில் திருவனந்தபுரம் சென்று கொண்டிருந்த இப்போது எதிரே இளைஞர் ஒருவர் ஓட்டி வந்த பைக் மீது எதிர்பாராத விதமாக கார் மோதியது. இந்த விபத்தில் இளைஞருக்கு காலில் அடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அந்த இளைஞர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். காயம் எதுவும் இன்றி தப்பிய நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு மருத்துவமனைக்கு உடன் சென்று அடிபட்ட நபருக்கு சிகிச்சைக்கான ஏற்பாடுகளை கவனித்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக சுராஜ் வெஞ்சாரமூடு மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு உள்ளனர்.




