ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

தெலுங்கில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான படம் மனம். இந்தப்படத்தில் நாகேஸ்வர ராவ், நாகார்ஜுனா, நாக சைதன்யா என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் நாகசைதன்யா, சமந்தா இருவரும் இரண்டு வேடங்களில் நடித்திருந்தனர். விக்ரம் குமார் படத்தை இயக்கியிருந்தார்.
இப்படம் வெளியாகி 8 ஆண்டுகள் ஆனதையடுத்து இயக்குனர் விக்ரம் குமாருடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை பகிர்ந்த நாக சைதான்யா, ‛மனம் படத்திற்கு பிறகு எட்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் விக்ரம்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பது மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக' தெரிவித்துள்ளார். தற்போது விக்ரம் குமார் இயக்கும் தேங்க்யூ என்ற படத்தில் நாக சைதன்யா நடிக்க அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார்.




