என் சினிமா வாழ்க்கையே முடிந்தது என நினைத்தேன் ; அக்ஷய் குமார் வெளியிட்ட அதிர்ச்சி தருணம் | 'துரந்தர்' படத்தை மிஸ் பண்ணினேனா ? நாகார்ஜுனா பதில் | மே மாதத்திற்கு முன்பு வரை ‛ஜனநாயகன்' வெளிவர வாய்ப்பில்லையாம் | தயாரிப்பாளர், இயக்குனர் தமிழழகன் காலமானார் | 2026 துவக்கத்திலேயே கயாடு லோகருக்கு அதிர்ச்சி தந்த 'பங்கி' | மோகன்லால், குஷ்பூ மகள்களின் அறிமுக பட டைட்டிலில் ஒற்றுமை | புறக்கணிப்பு : நேற்று அனுபமா... இன்று ஆண்ட்ரியா | தேர்வுகள் ஆரம்பம் : தியேட்டர்களுக்கு சிக்கல் | பஹத் பாசிலின் தெலுங்கு படத்தில் இணைந்த 'எக்கோ' பட வில்லன் | மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா! நாளை பர்ஸ்ட் லுக்! |

திரிஷ்யம், த்ரிஷ்யம்-2 என இரண்டு படங்களின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப்.. திரிஷ்யம்-2 படத்தை முடித்த பின்னர் அதற்கடுத்ததாக தெலுங்கிலும் த்ரிஷ்யம்-2 படத்தை ரீமேக் செய்து இயக்கினார்.. மீண்டும் மோகன்லாலை வைத்து ட்வல்த் மேன் என்கிற படத்தையும் இயக்கி முடித்து ரிலீஸுக்கும் தயார்நிலையில் வைத்துவிட்டார் ஜீத்து ஜோசப்.
அதேசமயம் ஏற்கனவே மோகன்லால், திரிஷா நடிப்பில் ஆரம்பித்த ராம் படத்தை தற்போதுள்ள சூழ்நிலையில் வெளிநாட்டில் படமாக்க இயலாது என்பதால் தற்சமயம் கிடப்பில் போட்டுவிட்டார். இந்தநிலையில் தற்போது மலையாள இளம் நடிகர் ஆசிப் அலி என்பவரை ஹீரோவாக வைத்து கூமன் என்கிற படத்தை இயக்குகிறார் ஜீத்து ஜோசப். ஆக்சன் படமாக உருவாகும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கியுள்ளது.




