தனுஷ் 56... தமிழரசன் பச்சமுத்து : அப்போ மாரி செல்வராஜ்? | தாய் கிழவி : சிங்கம் புலி நடிப்பை பாராட்டிய கமல் | தெலுங்கு, தமிழ் கலாசாரத்துடன் இணைந்திருக்கிறேன்! ஜான்வி கபூர் | போர் முழக்கம் : வடிவேலுவின் புதிய படம் | கமல் - ரஜினி இணையும் படம் குறித்து அனிருத் வெளியிட்ட அப்டேட்! | விஜய் சேதுபதியை இயக்கும் அஜித் பட இயக்குனர்! | போர் சூழல் : டாக்சிக் ரிலீஸ் ஜூன் 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு | ‛காற்றின் மொழி' இசையில்.... : ‛மெலோடி கிங்' வித்யாசாகர் பாடல்களை மறக்க முடியுமா? | பிளாஷ்பேக்: ராஜாஜி பாராட்டிய சிவாஜிகணேசன் | சிகரெட், மதுவை தொட்டதில்லை: சதீஷ் பெருமிதம் |

கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகமாக உள்ளது. மலையாள நடிகர் நடிகைகளும் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். நடிகர்கள் சுரேஷ்கோபி, மம்முட்டி, துல்கர் சல்மானை தொடர்ந்து டிகை அன்னா பென்னுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹெலன் படத்தின் மூலம் திரும்பி பார்க்க வைத்தவர் அன்னா பென். இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான மாநில விருது பெற்றார். கும்பளாங்கி நைட்ஸ், கப்பெல்லா படங்கள் மூலம் நடிப்பு திறனை நிரூபித்தவர். தற்போது நாரதன், என்னிட்டு அவசானம், காபா, நைட் டிரைவிங் படங்களில் நடித்து வருகிறார். அன்னா பென்னும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: எனக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டது. வாசனை இழப்பு தவிர அத்தனை அறிகுறியும் இருந்தது. பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது வீட்டுத் தனிமையில் இருக்கிறேன். மிகவும் கவனத்துடன் இரண்டு வருடங்களாக கொரோனாவிடமிருந்து தப்பி வந்தேன். இப்போது மாட்டிக் கொண்டேன். அனைவரும் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருங்கள். என்று கூறியிருக்கிறார்.




