ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டில் நிச்சயம் துல்கர் சல்மானுக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பது மட்டும் நன்றாகவே தெரிகிறது.. சமீப நாட்களாக துல்கர் சல்மானை பற்றிய செய்திகள் பாலிவுட்டில் சுழன்றடித்து வருகின்றன. பாலிவுட்டில் தனது முதல் என்ட்ரியான 'கர்வான்' படத்தில் ஏற்கனவே நடித்து முடித்துவிட்டார் துல்கர்.
அடுத்ததாக பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கும் 'மேன்மர்ஷியான்' படத்தில் நடிக்க இருக்கிறார் என சொல்லப்பட்டு வந்த நிலையில், அவருக்கு பதிலாக அபிஷேக் பச்சன் நடிக்கிறார் என அதிர்ச்சி தகவல் வெளியானது.
ஆனாலும் ஒரு கதவை மூடினால் இன்னொரு கதவு திறப்பது போல அபிஷேக் சர்மா என்பவர் இயக்கவுள்ள புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கதாநாயகியாக 'ராஞ்சனா' புகழ் சொனார் கபூர் நடிக்கிறார்.
கிரிக்கெட் பின்னணியில் அனுஜா சௌகான் என்பவர் 2008ல் எழுதிய 'தி சோயா பேக்டர்' என்கிற நாவலை தழுவி இந்தப்படம் உருவாக இருக்கிறது. இதில் கிரிக்கெட் கேப்டனாக துல்கர் சல்மான் நடிக்கிறாராம்.