ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் |

பாலிவுட் படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் நடிகர் நவாசுதீன் சித்திக். இவர் தமிழில் ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்திலும் வில்லனாக நடித்து இருந்தார். இவருக்கும், மனைவி ஆலியா என்பவருக்கும் 2 குழந்தைகள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். நவாசுதீன் தன்னை அடித்து துன்புறுத்தியதாக ஆலியாவும், தன்னிடம் பணம் பறிக்க முயற்சிப்பதாக நவாசுதீனும் மாறி மாறி புகார் அளித்திருந்தனர். இது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் கடந்த மார்ச் மாதம் நவாசுதீன் சித்திக் மற்றும் மனைவி ஆலியா இருவரும் மனக்கசப்புகளை மறந்து 'குழந்தைகளுக்காக ஒன்றாக இணைந்திருக்கிறோம்' என ஒன்றாக இணைந்தனர். இந்தநிலையில் நவாசுதீன் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‛‛திருமணத்திற்கு பிறகு தம்பதிகளிடையே காதல் நின்றுவிடும். திருமணத்திற்கு பிறகு இருவரிடையே இருக்கும் நேசம் குறைய தொடங்குகிறது. எதிர்பாராத விதமாக நிறைய விஷயங்கள் நடக்கின்றன. எனவே நீங்கள் யாரையாவது காதலித்தாலோ, தொடர்ந்து காதலிக்க விரும்பினாலோ திருமணம் செய்து கொள்ளாதீர்கள்'' என்றார்.
நவாசுதீனின் இந்த கருத்தால், மீண்டும் இருவருக்குள்ளும் பிரச்னை வெடித்ததாக தகவல் பரவுகிறது.