ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஹிந்தித் திரையுலகத்தில் 1960, 70களில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருந்தவர் தேவ் ஆனந்த். அவருக்கு வட இந்தியாவில் மட்டுமல்லாது தென்னிந்தியாவிலும் எண்ணற்ற ரசிகர்கள் உண்டு. 2011ம் ஆண்டு தனது 88வது வயதில் மறைந்தார்.
பாலிவுட்டில் இருக்கும் பல நடிகர்களிலும் பல்வேறு முதலீடுகளில் ஈடுபடுவது வழக்கம். பிரம்மாண்ட வீடுகளை வாங்குவது, தொழில்களில் ஈடுபடுவது என செய்வார்கள். தேவ் ஆனந்த் உச்சத்தில் இருந்த போது மும்பையின் பல பகுதிகளில் வீடுகளை வாங்கியவர்.
அப்படி அவர் வாங்கிய, மும்பை ஜுஹு பகுதியில் உள்ள ஒரு பங்களா 400 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. அவருடைய குடும்பத்தினர் அந்த பங்களாவை பிரபல ரியல் எஸ்டேட் கம்பெனி ஒன்றிற்கு விற்றுள்ளார்களாம். அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகி பணமும் கொடுக்கப்பட்டுவிட்டதாம். அந்த இடத்தில் 28 மாடியில் பிரம்மாண்ட குடியிருப்பு ஒன்றை கட்டப் போகிறார்களாம்.
தமிழ் சினிமாவிலும் தற்போதுள்ள முன்னணி நடிகர்கள் பலரும் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகள், நிலங்கள் ஆகியவற்றை வாங்கிக் குவித்துள்ளவர்கள்தான்.