அஜித்திற்கு இப்படி ஒரு வினோத பிரச்சனை இருந்ததா ? சுந்தர்.சி கூறிய ஆச்சர்ய தகவல் | அல்லு அர்ஜுன் மீது ஆந்திர போலீசார் வழக்கு | 'சர்பரோஸ்' 25ம் வருடத்தில் 2ம் பாகத்தை அறிவித்த அமீர்கான் | படத்தை ரிலீஸ் பண்ண விடாமல் டொவினோ தாமஸ் தடுக்கிறார் ; இயக்குனர் விரக்தி | குகைக்குள் விழுந்தவருக்கு பிஸ்கட்டால் மேக்கப் ; மஞ்சும்மேல் பாய்ஸ் இயக்குனர் புது தகவல் | ஜிவி பிரகாஷ் - சைந்தவி பிரிவு: குடும்ப பிரச்னை காரணமா? | கெட்ட வார்த்தையுடன் சந்தானம் பட புரோமோ வீடியோ | 2026 தேர்தல் - விஜய், விஷாலைத் தொடர்ந்து சூர்யா ? | சித்தப்பா பவன்கல்யாணை சந்தித்த ராம் சரண் | விக்ரமின் ‛வீர தீர சூரன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியானது! |
பாலிவுட்டில் பிரபல குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் நவாசுதீன் சித்திக். பேட்ட படத்தில் ரஜினிகாந்த்துக்கு வில்லனாக நடித்தவர் இவர்தான். இவரும் இவரது மனைவி ஆலியாவும் கருத்து வேறுபாடு காரணமாக தற்போது பிரிந்து வாழ்கின்றனர். இவர்களுக்குள் சொத்து குறித்த ஒரு வழக்கு ஒன்றும் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன் கூட இருவரும் ஒருவர்மீது ஒருவர் குற்றச்சாட்டுக்களை சுமத்தி சோஷியல் மீடியாவை பரபரபாக்கினார்கள். இந்த நிலையில் சமீபத்தில் ஹிந்தியில் துவங்கிய பிக்பாஸ் ஓடிடி சீசன்-2வில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார் நவாசுதீனின் மனைவி ஆலியா. சல்மான் கான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
இந்த போட்டியில் சக போட்டியாளர் ஒருவருடன் அமர்ந்து ஆலியா பேசும்போது, இழந்த தனது அடையாளத்தை மீட்பதற்காகவே தான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்துள்ளேன் என்று கூறியுள்ளார். நவாசுதீன் பற்றி கூறும்போது பல வருடங்களுக்கு முன் நவாசுதீனும் அவரது சகோதரரும் ஒரே வீட்டில் தங்கி இருந்தனர் என்றும் நவாசுதீனின் சகோதரர் தான் தனக்கு முதலில் பழக்கமானார் என்றும் அவர்களுடன் இணைந்து பேயிங் கெஸ்ட் ஆக தங்கி இருந்தபோது நவாசுதீன் சித்திக்கிடம் காதலில் விழுந்தேன் என்றும் கூறியுள்ளார்.
நவாசுதீன் சித்திக்கின் கண்கள் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று கூறியுள்ள அவர் 19 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு அவரிடம் இருந்து தற்போது பிரிந்து வாழ்வதாகவும் தங்களது விவாகரத்து வழக்கு தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் தற்போது இத்தாலியை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவரை காதலித்து வருவதாகவும் ஒரு புதிய தகவலையும் கூறியுள்ளார்.