காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாரூக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம், அஷுதோஷ் ரானா, டிம்பிள் கபாடியா மற்றும் பலர் நடிக்கும் 'பதான்' ஹிந்திப் படம் நாளை(ஜன., 25) உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு மொழிகளிலும் இப்படம் வெளியாக உள்ளது.
இப்படத்திற்கான முன்பதிவு கடந்த சில நாட்களாகவே பரபரப்பாக நடந்து வருகிறது. முன்பதிவாக மட்டும் ரூ.20 கோடிக்கு டிக்கெட் புக்கிங் நடந்துள்ளது. அதில் 30 சதவீதம் தென்னிந்தியாவில் புக்கிங் நடந்துள்ளது. இப்படத்தின் முதல் நாள் வசூல் சுமார் 50 கோடி வரை இருக்கும் என பாலிவுட்டினர் எதிர்பார்க்கின்றனர். இந்த வார இறுதி வசூலாக மட்டும் 200 கோடியைத் தாண்ட வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கிறார்கள்.
இந்தியாவில் மட்டும் 5000 மல்டிபிளக்ஸ் ஸ்கீரின்களில் இப்படம் வெளியாகிறது. அவற்றைத் தவிர்த்து சிங்கிள் ஸ்கீரின்களும் உண்டு. தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை, ஐதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களில் இப்படத்திற்கான முன்பதிவு சிறப்பாக உள்ளதாகவும் தெரிவிக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு பாலிவுட் படத்திற்கு இந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்திருப்பது அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
இப்படத்தின் வெற்றி அடுத்து அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் நடித்து வெளிவர உள்ள 'ஜவான்' படத்திற்கு பெரும் பிளஸ் பாயின்டாக அமையப் போகிறது.




