பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் | ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட் | மீண்டும் ஆஸ்கர் மேடையில் பிரியங்கா சோப்ரா | விடியலாக முழு வீடியோ வரும் : திரிஷாவுக்கு வாழ்த்துகள் கூறி பார்த்திபன் சஸ்பென்ஸ் | என் மீது திட்டமிட்டு தாக்குதல் : பிரியங்கா மோகன் | சம்பளத்தை குறைக்காத அஜித்: இன்னமும் சிக்காத தயாரிப்பாளர்கள் | மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் |

பாலிவுட் நடிகர் சல்மான்கான் தற்போது ஹிந்தியில் உருவாகி வரும் கபி ஈத் கபி தீவாளி என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. ஒரு பக்கம் பிளாட்பார கார் விபத்து, மான் வேட்டை என சர்ச்சைகளில் சிக்கினாலும், இன்னொருபக்கம் சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விஷயங்களிலும் தனது பங்களிப்பை தொடர்ந்து கொடுத்து வருகிறார்.
அந்த வகையில் மரம் நடுதலின் அவசியம் குறித்து தனது ரசிகர்களுக்கு வலியுறுத்தும் விதமாக ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் மரக்கன்றுகளை நட்டு தனது ரசிகர்களும் இதேபோன்ற மரம் நடும் பணியில் ஆர்வமாக ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் சல்மான்கான். பிரபலங்களை வைத்து இப்படி மரம் நடுதலின் அவசியத்தை தொடர்ந்து வலியுறுத்தி வரும் ராஜ்யசபா எம்பி சந்தோஷ்குமார் இந்த நிகழ்ச்சியின் போது உடனிருந்தார்.
மரம் நடுதலின் அவசியம் பற்றி சல்மான்கான் கூறும்போது, “சந்தோஷ் குமார் விடுத்த கிரீன் இந்தியா சேலஞ்சை நான் ஏற்றுக்கொண்டேன். இப்போது என்னுடைய ரசிகர்களுக்கு இந்த மரம் நடும் சவாலை நான் விடுகிறேன். பூமி வெப்பமயமாதலை தவிர்ப்பதற்காக ஒவ்வொரு மனிதரும் மரம் நடவேண்டும். ஒரு மனிதனின் வளர்ச்சி குறிப்பிட்ட உயரம் வந்து நின்றவுடன், அவர்கள் கட்டாயம் மரங்களை வளர்க்க ஆரம்பிக்க வேண்டும். மரம் என்பது நிலைத்து நிற்கும் மனிதனாகவும் மனிதன் என்பவன் நடமாடும் மரமாகவும் இருக்க வேண்டும். இந்த பந்தம் ரொம்பவே முக்கியமானது” என்று தத்துவார்த்தமாக கூறியுள்ளார் சல்மான்கான்.