எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக், ரஜினிகாந்த்துடன் பேட்ட படத்தில் வில்லனாக நடிதிருந்தார். இவரது தந்தை நவாபுதீன் சித்திக் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மரணம் அடைந்தார். தந்தையின் மீது மிகுந்த பாசம் கொண்ட நவாசுதீன் சித்திக் அவரது பெயரில் மாளிகை ஒன்றை எழுப்ப விரும்பினார்.
உத்தர பிரதேச மாநிலம் புதானாவில் உள்ள தனது தந்தை வாழ்ந்த பாரம்பரிய வீட்டை போலவே பிரமாண்ட மாளிகை ஒன்றை கட்டினார். அவரது நேரடி பார்வையிலும் அவரது ஆலோசனைப்படியும் இந்த மாளிகை உருவானது. கடந்த 5 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த இந்த மாளிகை இப்போது திறக்கப்பட்டு விட்டது.
இதற்கு 'நவாப் பங்களா' என்ற பெயர் சூட்டி உள்ளார். தனது புதிய பங்களாவின் படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நவாசுதீன் "ஒரு நல்ல நடிகர் எப்போதும் கெட்ட மனிதனாக இருக்க முடியாது, ஏனென்றால் அவனது உள்ளதில் உள்ள தூய்மைதான் நல்ல நடிப்பை வெளிப்படுத்தும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.