படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
பழம்பெரும் பாலிவுட் நடிகர் பிரேம் சோப்ரா. 1960களில் தொடங்கி 2020 வரை தொடர்ந்து 300க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோ, வில்லன், குணசித்ர வேடங்களில் நடித்துள்ளார். அதிகமாக வில்லன் வேடங்களில் நடித்தார். கடைசியாக பவுன்டி அவுர் பாப்லி படத்தில் நடித்தார்.
86 வயதாகும் பிரேம் சோப்ரா முதுமை காரணமாக சினிமாவை விட்டு விலகி மனைவி உமா சோப்ராவுடன் மும்பையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் திடீர் காய்ச்சல் காரணமாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் மனைவி அவருடன் இருந்ததால் அவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மனைவிக்கு 75 வயது ஆகிறது.
தற்போது இருவரும் லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பாலிவுட் நடிகர்கள் தொடர்ந்து கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருவது பாலிவுட் நட்சத்திரங்கள் இடையே கலக்கத்தை உருவாக்கி இருக்கிறது.