சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் |
இந்தியாவில் கோவாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவுக்கு அடுத்த பெரிய திரைப்பட விழா கோல்கட்டா சர்வதேச திரைப்பட விழாவாகும். கோவாவில் சர்வதேச திரைப்பட விழா சமீபத்தில் நடந்து முடிந்தது. சென்னையில் நடந்த சர்வதேச திரைப்பட விழா நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் கோல்கட்டாவில் நாளை (ஜன 7) தொடங்கி 14ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த சர்வதேச திரைப்பட விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேற்கு வங்க மாநில தகவல் மற்றும் கலாச்சாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: மாநிலத்தின் தற்போதைய கோவிட் நிலைமையை மதிப்பிடும்போது, சினிமா ஆர்வலர்கள் மற்றும் குடிமக்கள் மத்தியில் கோவிட் மேலும் அதிகமாவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது.
மேலும் திரைப்பட விழாக் குழுவில் உள்ள திரையுலக பிரபலங்கள் மற்றும் பலர் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே குடிமக்களின் பாதுகாப்பை கவனமாக பரிசீலித்த மாநில அரசு, ஜனவரி 7 முதல் நடைபெறவிருந்த 27வது கோல்கட்டா சர்வதேச திரைப்பட விழாவை தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது. விழாவின் அடுத்த தேதி உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.