25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
இந்தியாவில் கோவாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவுக்கு அடுத்த பெரிய திரைப்பட விழா கோல்கட்டா சர்வதேச திரைப்பட விழாவாகும். கோவாவில் சர்வதேச திரைப்பட விழா சமீபத்தில் நடந்து முடிந்தது. சென்னையில் நடந்த சர்வதேச திரைப்பட விழா நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் கோல்கட்டாவில் நாளை (ஜன 7) தொடங்கி 14ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த சர்வதேச திரைப்பட விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேற்கு வங்க மாநில தகவல் மற்றும் கலாச்சாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: மாநிலத்தின் தற்போதைய கோவிட் நிலைமையை மதிப்பிடும்போது, சினிமா ஆர்வலர்கள் மற்றும் குடிமக்கள் மத்தியில் கோவிட் மேலும் அதிகமாவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது.
மேலும் திரைப்பட விழாக் குழுவில் உள்ள திரையுலக பிரபலங்கள் மற்றும் பலர் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே குடிமக்களின் பாதுகாப்பை கவனமாக பரிசீலித்த மாநில அரசு, ஜனவரி 7 முதல் நடைபெறவிருந்த 27வது கோல்கட்டா சர்வதேச திரைப்பட விழாவை தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது. விழாவின் அடுத்த தேதி உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.