டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

இந்தியாவில் கோவாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவுக்கு அடுத்த பெரிய திரைப்பட விழா கோல்கட்டா சர்வதேச திரைப்பட விழாவாகும். கோவாவில் சர்வதேச திரைப்பட விழா சமீபத்தில் நடந்து முடிந்தது. சென்னையில் நடந்த சர்வதேச திரைப்பட விழா நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் கோல்கட்டாவில் நாளை (ஜன 7) தொடங்கி 14ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த சர்வதேச திரைப்பட விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேற்கு வங்க மாநில தகவல் மற்றும் கலாச்சாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: மாநிலத்தின் தற்போதைய கோவிட் நிலைமையை மதிப்பிடும்போது, சினிமா ஆர்வலர்கள் மற்றும் குடிமக்கள் மத்தியில் கோவிட் மேலும் அதிகமாவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது.
மேலும் திரைப்பட விழாக் குழுவில் உள்ள திரையுலக பிரபலங்கள் மற்றும் பலர் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே குடிமக்களின் பாதுகாப்பை கவனமாக பரிசீலித்த மாநில அரசு, ஜனவரி 7 முதல் நடைபெறவிருந்த 27வது கோல்கட்டா சர்வதேச திரைப்பட விழாவை தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது. விழாவின் அடுத்த தேதி உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.