வாரணாசி வெளிநாட்டு உரிமை தான் ராஜமவுலியின் சம்பளம்? | ஆபாச தாக்குதல் : ஈஷா ரெப்பா போலீஸில் புகார் | மூன்றாம் பாகத்தோடு திரிஷ்யம் முடிவடைகிறது : ஜீத்து ஜோசப் | துரந்தர் 2 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த விக்கி கவுசல், யாமி கவுதம் | யூத் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது | அதர்வா இரு வேடங்களில் நடிக்கும் ‛வலை' | 2 கோடி வசூலுக்கு 30 லட்சம் கணக்கு சொன்ன வினியோகஸ்தர் : ஆர்கே செல்வமணி அதிர்ச்சித் தகவல் | ‛ஊருக்கு ரெண்டு ஊதாரி' என்ன மாதிரியான படம் | காவல் நிலையத்தில் நடக்கும் கதை | 'லெகசி' வெப் தொடரில் கேங்ஸ்டர் ஆக மாதவன் |

இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்கள் கோடி கணக்கில் இருப்பதால் அவர்களை சினிமாவும் தன் பக்கம் இழுத்து வருகிறது. தோனி, சச்சினின் வாழ்க்கை சினிமா ஆனது. இந்தியா உலக கோப்பையை வென்ற நிகழ்வு 83 என்ற பெயரில் படமானது. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலிராஜ் வாழ்க்கை தற்போது சபாஷ் மிது என்ற பெயரில் படமாகி வருகிறது. இதில் மிதாலி ராஜாக டாப்ஸி நடித்து வருகிறார்.
இந்த நிலையில் பாலிவுட் நடிகையும், இந்திய கேப்டன் விராட்கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா இந்திய கிரிக்கெட் வீராங்களை ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கிறார். படத்திற்கு சக்தா எக்ஸ்பிரஸ் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அனுஷ்கா கூறியிருப்பதாவது: இது மிகவும் சிறப்பு வாய்ந்த படம், ஏனெனில் இது மிகப்பெரிய தியாகத்தின் கதை. சக்தா எக்ஸ்பிரஸ் முன்னாள் இந்திய கேப்டன் ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கை மற்றும் காலங்களால் ஈர்க்கப்பட்டுள்ளது, மேலும் இது உலகத்தின் கண்ணை திறக்கும். கிரிக்கெட் வீராங்கனையாகி தனது நாட்டை உலக அரங்கில் பெருமைப்படுத்த ஜூலன் முடிவு செய்த நேரத்தில், கிரிக்கெட் விளையாடுவதைப் பற்றி பெண்கள் நினைப்பது கூட மிகவும் கடினமாக இருந்தது.
ஒரு பெண்ணாக, ஜூலனின் கதையை கேட்டு நான் பெருமைப்பட்டேன், அவரது வாழ்க்கையை பார்வையாளர்கள் மற்றும் கிரிக்கெட் பிரியர்களுக்கு கொண்டு வர முயற்சிப்பது எனக்கு கிடைத்த கவுரவம். ஒரு கிரிக்கெட் தேசமாக, நமது பெண் கிரிக்கெட் வீரர்களுக்கு நாம் உரிய தகுதியை வழங்க வேண்டும். ஜூலனின் கதை உண்மையிலேயே இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கியமான கதையாகும். என்கிறார்.