கார் ரேஸூக்காக 42 கிலோ எடை குறைத்தேன்: அஜித் பேட்டி | ரசிகர்கள் செய்த காரியத்தால் சூரி வேதனை | தமிழ் சினிமாவில் குறைந்து வரும் காமெடி…, ரைட்டர்கள் இல்லையா? | 3வது வாரத்திலும் முன்னேறும் 'டூரிஸ்ட் பேமிலி', பின்வாங்கும் 'ரெட்ரோ' | தக் லைப் : ஓடிடி, சாட்டிலைட் உரிமை இத்தனை கோடியா ? | ஸ்லிம் ரகசியத்தை கேட்டவர்களுக்கு குஷ்பு கொடுத்த பதில்! | மீண்டும் நடிப்புக்கு திரும்பிய எமி ஜாக்சன்! | ரவி மோகன் - கெனிஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பாடகி சுசித்ரா! | பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத் தலைப்புக்கு சிக்கல்! | நடிகை சிம்ரனுக்கு துணையாக டிவி நடிகை ஆனந்தி |
இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்கள் கோடி கணக்கில் இருப்பதால் அவர்களை சினிமாவும் தன் பக்கம் இழுத்து வருகிறது. தோனி, சச்சினின் வாழ்க்கை சினிமா ஆனது. இந்தியா உலக கோப்பையை வென்ற நிகழ்வு 83 என்ற பெயரில் படமானது. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலிராஜ் வாழ்க்கை தற்போது சபாஷ் மிது என்ற பெயரில் படமாகி வருகிறது. இதில் மிதாலி ராஜாக டாப்ஸி நடித்து வருகிறார்.
இந்த நிலையில் பாலிவுட் நடிகையும், இந்திய கேப்டன் விராட்கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா இந்திய கிரிக்கெட் வீராங்களை ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கிறார். படத்திற்கு சக்தா எக்ஸ்பிரஸ் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அனுஷ்கா கூறியிருப்பதாவது: இது மிகவும் சிறப்பு வாய்ந்த படம், ஏனெனில் இது மிகப்பெரிய தியாகத்தின் கதை. சக்தா எக்ஸ்பிரஸ் முன்னாள் இந்திய கேப்டன் ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கை மற்றும் காலங்களால் ஈர்க்கப்பட்டுள்ளது, மேலும் இது உலகத்தின் கண்ணை திறக்கும். கிரிக்கெட் வீராங்கனையாகி தனது நாட்டை உலக அரங்கில் பெருமைப்படுத்த ஜூலன் முடிவு செய்த நேரத்தில், கிரிக்கெட் விளையாடுவதைப் பற்றி பெண்கள் நினைப்பது கூட மிகவும் கடினமாக இருந்தது.
ஒரு பெண்ணாக, ஜூலனின் கதையை கேட்டு நான் பெருமைப்பட்டேன், அவரது வாழ்க்கையை பார்வையாளர்கள் மற்றும் கிரிக்கெட் பிரியர்களுக்கு கொண்டு வர முயற்சிப்பது எனக்கு கிடைத்த கவுரவம். ஒரு கிரிக்கெட் தேசமாக, நமது பெண் கிரிக்கெட் வீரர்களுக்கு நாம் உரிய தகுதியை வழங்க வேண்டும். ஜூலனின் கதை உண்மையிலேயே இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கியமான கதையாகும். என்கிறார்.