காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

தமிழ் சினிமாவில் நீண்டகாலமாக நடித்து வரும் நடிகை அவர். தமிழ் மட்டுமின்றி பிற மொழிகளிலும் பிரபலமான அவருக்கு கைவசம் முன்னணி நடிகர்களின் படங்கள் உள்ளது. ஆனால் என்ன நினைத்தாரோ தெரியவில்லை திடீரென திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகும் நடித்து வரும் அவர், இயக்குநர்களுக்கு புதிதாக கண்டிசன்கள் போடுகிறாராம். அதாவது, 'இனிமேல் நாயகர்களுடன் டூயட் எல்லாம் வைக்க வேண்டாம், காதல், ரொமான்ஸ் காட்சிகளில் எல்லாம் முன்போல் நடிக்க முடியாது' என கறாராகச் சொல்கிறாராம்.
ஏற்கனவே கதை கேட்டுவிட்டுத் தானே நடிக்க சம்மதித்தார். இப்போது திடீரென இப்படி சொல்கிறாரே என இயக்குநர்கள் புலம்பி வருகிறார்களாம். புதிதாக கதை சொல்ல வருபவர்களிடம் இதே கண்டிசன்களை மறக்காமல் சொல்லி விடுகிறாராம் நடிகை.
திருமணத்திற்குப் பிறகு குடும்பத்தில் பிரச்சினை வரும் என நடிகை நினைப்பது சரி தான். ஆனால் சம்பளத்தை மட்டும் பழைய மாதிரியே கோடிகளில் எதிர்பார்க்கிறாரே.. அதையும் குறைத்துக் கொள்ள வேண்டாமா என ஆதங்கப் படுகின்றனர் இயக்குநர்கள்.




