அம்மா மகள் உறவை ஒரு வரையறுக்க முடியாத கோணத்தில் சொல்லியிருக்கிறது உள்ளம் தள்ளாடுதே படம். அம்மாவாக சுஹாசினியும் மகளாக வேகம் அர்ச்சனாவும் நடித்திருக்கிறார்கள்.சுஹாசினிக்கு 18 வயது இருக்கும் போது விதவையாகிறார்.வயிற்றில் குழந்தையாக அர்ச்சனா. சின்ன வயதில் இருந்து அர்ச்சனாவை பல்வேறு போராட்டங்களுக்கு இடையே வளர்க்கிறார் சுஹாசினி. அர்ச்சனா பெரிய பெண் ஆனதும் ஒரு பையனை (சிவாஜிராஜா) வை காதலிக்கிறார். அந்தப் பையன் ஒரு அனாதை, சுஹாசினி அவர்களது காதலுக்கு பச்சைக் கொடி காட்டுகிறார்.இதற்கிடையே தனது படிப்பை முடித்து விட்டு திருமணம் செய்து கொள்ளலாம் என அர்ச்சனா முடிவு செய்கிறார்.வெளிநாட்டில் படிக்கப் போவதற்கு முன்பு தனது காதலனை சுஹாசினியோடு தங்கிக் கொள்ளச் சொல்கிறார். சுஹாசினி தனிமையை உணராமல் இருப்பார் என்பதற்காக இந்த ஏற்பாடு, அவர்களும் சரி என்கின்றனர். அர்ச்சனா வெளிநாடு போக சுஹாசினி சிவாஜிராஜாவுடன் நட்பு ஏற்பட்டு நல்லவிதமான ஒரு உறவு ஏற்படுகிறது. இந்த நட்பினால் ஒரு இருக்கமான மனநிலையில் இருந்த சுஹாசினி எப்படி அதிலிருந்து மீல்கிறார் என்பதே உள்ளம் தள்ளாடுதே படத்தின் கதை. வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்தப் படத்தை ஹரி புரொடக்ஷன் தயாரிக்க, நாகேந்திரகுமார் ஒளிப்பதவு செய்து இயக்கியிருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் கிரண் சுனில் காஷ்யப் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் இயக்குனர் நாகேந்திரகுமார் தெலுங்கு, கன்னடம், இந்தி, ராஜஸ்தான், பிகாரி, மராத்தி,பெங்காலி ஆகிய மொழிகளில் 25 படங்களில் பணியாற்றியிருக்கிறார். ஒளிப்பதிவாளராக இருந்த நாகேந்திர குமார் முதன் முதலாக மாத்ரு தேவோ பவா தெலுங்குப் படத்தை இயக்கியவர்