37 வருட கிடப்பிற்குப் பிறகு வெளியாகும் ரஜினிகாந்தின் ஹிந்திப் படம் | ஆஸ்கர் விருது : நாமினேஷன் பட்டியலில் இடம் பெறாத 'ஹோம்பவுண்ட்' | ‛திரெளபதி 2' படத்தை பாடமாக வைக்க வேண்டும்: சொல்கிறார் எச்.ராஜா | 'சங்கராந்திகி வஸ்துனம்' ஹிந்தி ரீமேக்கில் மீனாட்சி சவுத்ரி வேடத்தில் ராஷி கண்ணா! | 'பார்டர் 2' படக்குழு வெளியிட்ட 'தி பிரேவ்ஸ் ஆப் த சாயில்' டிரைலர் | மிகவும் உடல் மெலிந்த திரிஷா! வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!! | குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் |

போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டது, கோலிவுட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மலையாளம், தெலுங்கு, ஹிந்தி பட உலகில் கேள்விப்பட்ட விஷயங்கள் தமிழில் நடப்பது பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சில ஆண்டுகளாக தமிழ் சினிமா வட்டாரங்களில் பார்ட்டி அதிகமாகிவிட்டது. அதில் சரக்கு தவிர, அதிக போதையை ஏற்படுத்த சில விஷயங்கள் உள்ளே வந்தன. சிலர் அதை வியாபாரமாக்கி, பணம் பார்த்தார்கள். அதன்விளைவுதான் போதை நடமாட்டம் வழக்கு. இப்படி பல பார்ட்டிகள் நடந்து வருகின்றன.
ஸ்ரீகாந்த் மட்டுமே சிக்கி இருக்கிறார். விசாரணை தீவிரப்படுத்தப்பட்டால் நேர்மையாக நடந்தால் இன்னும் பலர் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது. மலையாள படப்பிடிப்பில் நடிகர்கள் போதை பயன்படுத்தக் கூடாது என்று அங்குள்ள சங்கங்கள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளன. அதேப்போல் தமிழ் சினிமாவிலும் கட்டுப்பாடுகள் வரும் என்று கூறப்படுகிறது. இப்படிப்பட்ட பார்ட்டிகளுக்கு சில நடிகர், நடிகைகள் ரெகுலராக செல்வது உண்டாம். அவர்களை, போலீசார் தீவிரமாக கண்காணிக்கிறார்கள். அதனால், சில வாரங்கள் கோலிவுட்டில் பார்ட்டி, கொண்டாட்டங்கள் இருக்காது என்று கூறப்படுகிறது.