22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான 'டிராகன்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் கயாடு லோஹர். தமிழில் அவருக்கு முதல் படமாக வெளியான இந்தப்படத்திலேயே மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்றார் கயாடு லோஹர். அதற்கு சமகாலத்திலேயே அதர்வாவுடன் ஜோடியாக அவர் நடித்து வந்த 'இதயம் முரளி' திரைப்படம் அடுத்து வெளியாக இருக்கிறது. 'டிராகன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பும் கயாடு லோஹருக்கு கிடைத்துள்ளது.
இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் 'பள்ளிச்சட்டம்பி' என்கிற படத்தில் நடிகர் டொவினோ தாமஸுக்கு ஜோடியாக நடிக்கிறார் கயாடு லோஹர், ஏற்கனவே மலையாளத்தில் '19ம் நூற்றாண்டு', 'ஒரு ஜாதி ஜாதகம்' உள்ளிட்ட படங்களில் அவர் நடித்திருக்கிறார். மலையாளத்தில் போலி என்கவுண்டர் கதை அம்சத்துடன் வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய 'ஜன கன மன' படத்தை இயக்கிய இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனி தான் பள்ளிச்சட்டம்பி படத்தை இயக்குகிறார்.