பிரதமரின் வேண்டுகோளை ஏற்று வந்தே பாரத்தில் பயணித்த அனுபம் கெர் | சகோதரர் இறந்த துக்கத்தை மறைத்துக்கொண்டு மறுநாளே காமெடி காட்சியில் நடித்த ஊர்வசி | சாமியாடும் ரசிகர்கள்: நடிகர் சூர்யா வேண்டுகோள் | அமைச்சர் ராஜ் மோகனுக்கு செயலாளர் விஷால் எதிர்ப்பு, தலைவர் நாசர் வாழ்த்து | சூர்யாவை உள்ளூரில் சுற்றுலா செல்ல வலியுறுத்திய விஜய் தேவரகொண்டா | மூணாறு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுடன் நடனமாடிய விக்ரம் | இளையராஜாவை தாக்கி வசனமா? 'கருப்பு' படக்குழு விளக்கம் | மோகன்லாலை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர் | சண்டை கலைஞர்கள், கராத்தே மாஸ்டருக்கு நன்றி கூறிய நடிகை அபிராமி | முதல்வரை சந்திக்கும் சினிமாதுறையினர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? |

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான 'டிராகன்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் கயாடு லோஹர். தமிழில் அவருக்கு முதல் படமாக வெளியான இந்தப்படத்திலேயே மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்றார் கயாடு லோஹர். அதற்கு சமகாலத்திலேயே அதர்வாவுடன் ஜோடியாக அவர் நடித்து வந்த 'இதயம் முரளி' திரைப்படம் அடுத்து வெளியாக இருக்கிறது. 'டிராகன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பும் கயாடு லோஹருக்கு கிடைத்துள்ளது.
இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் 'பள்ளிச்சட்டம்பி' என்கிற படத்தில் நடிகர் டொவினோ தாமஸுக்கு ஜோடியாக நடிக்கிறார் கயாடு லோஹர், ஏற்கனவே மலையாளத்தில் '19ம் நூற்றாண்டு', 'ஒரு ஜாதி ஜாதகம்' உள்ளிட்ட படங்களில் அவர் நடித்திருக்கிறார். மலையாளத்தில் போலி என்கவுண்டர் கதை அம்சத்துடன் வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய 'ஜன கன மன' படத்தை இயக்கிய இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனி தான் பள்ளிச்சட்டம்பி படத்தை இயக்குகிறார்.




