என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்திலேயே யாரும் எதிர்பாராத வகையில் நமிதா மாரிமுத்து வெளியேறிவுள்ளார்.
பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் ஒருவராக திருநங்கை நமிதா மாரிமுத்துவும் கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதல் திருநங்கை என்பதால் அவர் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்திருந்தது. நமிதாவின் சோகக்கதையை கேட்ட பலரும் அவருடைய அனுதாபியாக மாறியிருந்தார்கள். இந்நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தால் நமிதா போட்டியை விட்டு விலகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய எபிசோடில் இது பற்றி பேசிய கமல், பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்களும் சரி, வெளியே இருப்பவர்களும் சரி, ஏன் நானும் கூட நமிதா மாரிமுத்துவிடம் மனதை பறிகொடுத்துவிட்டோம். இப்படி ஒரு பிரதிநிதி மிகவும் முக்கியம் என நானும் நினைத்துக்கொண்டிருந்தேன். தொடர் இடர் வந்தாலும் வெற்றிகளை தேடி பெற்ற நமிதா இதுபோலவே செய்ய வேண்டும் என வாழ்த்துகிறேன் என கமல் கூறியுள்ளார். காரணங்கள் சரிவர தெரியாத நிலையில் முதல் வாரத்திலேயே நமிதா வெளியேறி இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.