கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
பிக்பாஸ் போட்டியாளரான அபிஷேக்கின் முன்னாள் மனைவி தீபா தங்களது விவாகரத்து குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தொடங்கி மூன்று நாட்கள் முடிந்துள்ள நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களது வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் சினிமா விமர்சகரான அபிஷேக் தனது அம்மா பற்றி நினைவு கூறும் போது அவரது விவாகரத்து குறித்தும் பேசியிருந்தார்.
இந்நிலையில் அபிஷேக் தேவையில்லாமல் பழைய விஷயங்களை கிளறுவதாக அவரது முன்னாள் மனைவி தீபா நடராஜன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், 'அபிஷேக்கை விவாகரத்து செய்தது என் தனிப்பட்ட விருப்பம். அதற்கான விளைவுகளை நான் சந்தித்து வருகிறேன். சிலர் பழைய விஷயங்களை கிளறுவது நம்முடைய ஒருநாள் அல்லது வாரத்தையே வீணாக்குகிறது' என அதில் கூறியிருந்தார். மேலும் மற்றொரு பதிவில், 'திருமணமான புதிதில் அபிஷேக்குடன் சேர்ந்து பேட்டியளித்திருந்தேன். ஆனால், விவாகரத்திற்கு பிறகு தான் அது ட்ரெண்டாகிறது. அதை நீக்கும்படி மீடியாவிடம் கேட்டேன். ஆனால், அவர்கள் செய்யவில்லை' எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.