ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
பிக்பாஸ் போட்டியாளரான அபிஷேக்கின் முன்னாள் மனைவி தீபா தங்களது விவாகரத்து குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தொடங்கி மூன்று நாட்கள் முடிந்துள்ள நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களது வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் சினிமா விமர்சகரான அபிஷேக் தனது அம்மா பற்றி நினைவு கூறும் போது அவரது விவாகரத்து குறித்தும் பேசியிருந்தார்.
இந்நிலையில் அபிஷேக் தேவையில்லாமல் பழைய விஷயங்களை கிளறுவதாக அவரது முன்னாள் மனைவி தீபா நடராஜன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், 'அபிஷேக்கை விவாகரத்து செய்தது என் தனிப்பட்ட விருப்பம். அதற்கான விளைவுகளை நான் சந்தித்து வருகிறேன். சிலர் பழைய விஷயங்களை கிளறுவது நம்முடைய ஒருநாள் அல்லது வாரத்தையே வீணாக்குகிறது' என அதில் கூறியிருந்தார். மேலும் மற்றொரு பதிவில், 'திருமணமான புதிதில் அபிஷேக்குடன் சேர்ந்து பேட்டியளித்திருந்தேன். ஆனால், விவாகரத்திற்கு பிறகு தான் அது ட்ரெண்டாகிறது. அதை நீக்கும்படி மீடியாவிடம் கேட்டேன். ஆனால், அவர்கள் செய்யவில்லை' எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.