‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் யோகி பாபுவிடம் அடிக்கடி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்ட ரஜினிகாந்த் | பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்க பயப்படும் ‛காந்தாரா' ஒளிப்பதிவாளர் | ‛ஆடு 3' படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறாரா நிகிலா விமல் ? ; இயக்குனர் பதில் | ஒருவர் பின் ஒருவராக போகிறார்கள் ; நண்பர் மறைவால் அமிதாப் பச்சன் வேதனை | ஷோரூம் திறப்பு விழாவில் அரசியல் பஞ்ச் டயலாக் பேசிய ரவி மோகன்! | தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான மோகன்லாலை நடிக்க வைக்கும் பிரியதர்ஷன்! | அஜித்துக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்! | விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா! | உயரே சென்றாலும் உதவியவர்களை மறக்காதே: கென் கருணாஸிற்கு தனுஷ் அறிவுரை | '29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! |

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி தற்போது தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப கதையம்சம் கொண்ட தொடர்களை வழங்கி டிஆர்பியில் எட்டிப் பார்க்க ஆரம்பிந்துள்ளது. அந்த வகையில் கலர்ஸ் தமிழின் முக்கிய தொடர்களில் ஒன்றாக 'சில்லுன்னு ஒரு காதல்' ரசிகர்களின் மனதை தொட்டுள்ளது. இதுவரை 275 எபிசோடுகளை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த தொடரில் சமீர் அஹமது, தர்ஷினி கெளடா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சீரியலின் வெற்றிக்கு முதுகெலும்பாக இருந்து வந்த அதன் இயக்குநர் சுரேஷ் ஷண்முக தொடரை விட்டு தற்போது விலகியுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் மிகவும் உருக்கமான பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். டெக்னீசியன்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிடுள்ள சுரேஷ், 'பிரசவத்தில் குழந்தையை பறிகொடுத்த தாயை போன்ற என் நிலை...' என சீரியலை விட்டு போவதை மிகவும் உருக்கமாக பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.