சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி | காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா | ரூ.83 கோடி வசூலித்த ‛டியூட்' : 'ஹாட்ரிக்' 100 கோடியில் பிரதீப் ரங்கநாதன் | கர்நாடகாவில் 200 கோடி வசூல் சாதனையில் 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் |
தொலைக்காட்சிகளுக்கு இடையே நடக்கும் டிஆர்பி போட்டியில் புதுப்புது சீரியல்களும், ரியாலிட்டி ஷோக்களும் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக ஜீ தமிழ் ஒளிபரப்பும் நிகழ்ச்சி தான் சர்வைவர். ஆக்ஷன் கிங் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் இரு அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டிகளில் விளையாடி வருகின்றனர். அதில் ஒருவராக விளையாட்டு வீராங்கனை ஐஸ்வர்யா கிருஷ்ணனும் கலந்து கொண்டுள்ளார்.
இளைஞர்களின் புது கிரஷாக மாறியுள்ள ஐஸ்வர்யா தனக்கு சர்வைவர் வாய்ப்பு கிடைத்தது குறித்து ஒரு பேட்டியில் முன்னதாக தெரிவித்திருந்தார். அந்த பேட்டியில் அவர், 'பிட்னஸ் டிரெய்னர் ஆக வேண்டும் என்பது என் ஆசை. இன்ஸ்டாவில் சில ஸ்டண்ட் வீடியோக்களை அப்லோட் செய்திருந்தேன். என்னுடைய அந்த ஸ்டண்ட் வீடியோக்களை பார்த்த ஜீ தமிழ் நிர்வாகம் என்னை அழைத்து சர்வைவர் ஷோவில் கலந்து கொள்ள சொன்னார்கள். அதன் பின் நேரடியாக இண்டர்வியூ நடந்தது. இப்படி தான் எனக்கு சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது' என கூறியுள்ளார்.