ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜோடியாக நடித்து வரும் சரவண விக்ரம் - ஐஸ்வர்யா நிஜத்திலும் காதலர்களா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், தற்போது அந்த கேள்விக்கு இருவரும் ஜோடியாக சேர்ந்தே விளக்கமளித்துள்ளனர்.
இப்போதெல்லாம் சீரியலில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் நிஜ வாழ்விலும் கல்யாணம் செய்து கொள்வது அதிகமாகி வருகிறது. அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற பாண்டியன் ஸ்டோர் தொடரில் கண்ணன் - ஐஸ்வர்யா ஜோடி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கண்ணன் கதாபாத்திரத்தில் சரவண விக்ரமும், ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் தீபிகாவும் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் இவர்கள் இருவரும் அடிக்கடி ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இதன் காரணமாக 'நீங்கள் நிஜத்திலும் காதல் ஜோடியாக ஆகிவிட்டீர்களா'? என ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகின்றனர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சரவண விக்ரம், தீபிகா இருவரும் இணைந்து இன்ஸ்டாகிராம் லைவ்வில் 'நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டும் தான். இந்த கேள்வியை தான் எல்லோரும் கேட்கிறார்கள். இதற்கு பதில் சொல்லி சொல்லி எங்களுக்கே கஷ்டமாக இருக்கிறது'என கூறினர்.




