மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை சீசன் 3-ல் முக்கிய ஜோடியாக வலம் வந்த மணிகண்டன் சோபியா தம்பதியினர் நிகழ்ச்சியிலிருந்து விலகியதற்கான காரணத்தை தற்போது தெரிவித்துள்ளனர்.
விஜய் டிவியின் மிஸ்டர் அண்ட் மிசஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளர்களாக வலம் வந்தவர்கள் சோபியா - மணிகண்டன் ஜோடி. இந்நிலையில் அவர்கள் திடீரென நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியானது. நிகழ்ச்சியிலிருந்து விலகியது குறித்து பேசிய சோபியா, “தாமதமாக பதிலளிப்பதற்காக மன்னனித்து விடுங்கல். நாங்கள் ஏன் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை 3ல் பங்கேற்கவில்லை என அதிகம் அன்புடன் மெசேஜ்கள் வந்தன. எனக்கு சில மெடிக்கல் பிரச்சனைகள் வந்ததால் மருத்துவர்கள் முழு ஓய்வில் இருக்க அட்வைஸ் செய்தார்கள். அதனால் வேறு வழி இல்லாமல் நாங்கள் வெளியேறினோம். கண்டிப்பாக வைல்டு கார்டு ரவுண்டில் நாங்கள் வருவோம்.” என கூறியுள்ளார்.
சோபியா - மணிகண்டன் நிகழ்ச்சியிலிருந்து விலகியது அவர்களது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தாலும், சோபியாவின் விளக்கம் அவரது ரசிகர்களை வைல்டு கார்டு ரவுண்டிற்காக காத்திருக்க வைத்துள்ளது.




