ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை சீசன் 3-ல் முக்கிய ஜோடியாக வலம் வந்த மணிகண்டன் சோபியா தம்பதியினர் நிகழ்ச்சியிலிருந்து விலகியதற்கான காரணத்தை தற்போது தெரிவித்துள்ளனர்.
விஜய் டிவியின் மிஸ்டர் அண்ட் மிசஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளர்களாக வலம் வந்தவர்கள் சோபியா - மணிகண்டன் ஜோடி. இந்நிலையில் அவர்கள் திடீரென நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியானது. நிகழ்ச்சியிலிருந்து விலகியது குறித்து பேசிய சோபியா, “தாமதமாக பதிலளிப்பதற்காக மன்னனித்து விடுங்கல். நாங்கள் ஏன் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை 3ல் பங்கேற்கவில்லை என அதிகம் அன்புடன் மெசேஜ்கள் வந்தன. எனக்கு சில மெடிக்கல் பிரச்சனைகள் வந்ததால் மருத்துவர்கள் முழு ஓய்வில் இருக்க அட்வைஸ் செய்தார்கள். அதனால் வேறு வழி இல்லாமல் நாங்கள் வெளியேறினோம். கண்டிப்பாக வைல்டு கார்டு ரவுண்டில் நாங்கள் வருவோம்.” என கூறியுள்ளார்.
சோபியா - மணிகண்டன் நிகழ்ச்சியிலிருந்து விலகியது அவர்களது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தாலும், சோபியாவின் விளக்கம் அவரது ரசிகர்களை வைல்டு கார்டு ரவுண்டிற்காக காத்திருக்க வைத்துள்ளது.