காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
ஜி தமிழ் தொலைக்காட்சியின் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் புரோமோவை சிவகார்த்திகேயன் வெளியிட்டார். வைரலாகி வரும் இந்த புரோமோவால் நிகழ்ச்சி குறித்தான மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தொலைக்காட்சிகளில் சீரியலுக்கு அடுத்தப்படியாக ரியாலிட்டி ஷோக்களுக்கு இடையேயும் பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் ஜி தமிழும் 'சர்வைவர்' என்கிற பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோவை தற்போது தமிழில் அறிமுகப்படுத்துகிறது.
இந்த போட்டியில் தனி தீவில் விடப்படும் போட்டியாளர்கள் அங்கு நிலவும் சூழ்நிலைகளை சமாளித்து அவர்களே அனைத்தையும் தாக்கு பிடித்து வாழ வேண்டும். மற்ற சேனல்களின் ரியாலிட்டி ஷோக்களை முன்னணி ஹீரோக்கள் தொகுத்து வழங்குவது போலவே, 'சர்வைவர்' நிகழ்ச்சியை ஆக்ஷன் கிங் அர்ஜூன் தொகுத்து வழங்கவுள்ளார். இதன் புரோமோவை சிவகார்த்திகேயன் அண்மையில் வெளியிட்டுள்ள நிலையில் இணையத்தில் வைரலாகி வருகிறது. புரோமோவில் பேசும் அர்ஜூன், 'பரிசு ஒரு கோடி... அதை கஷ்டப்படாமல் ஜெயிக்க முடியாது' என்று கூறுகிறார்.
சர்வைவர் நிகழ்ச்சியில் விஜயலக்ஷ்மி, நந்தா, வனிதா விஜயகுமார், கோபிநாத் ரவி, ஸ்ரீ ரெட்டி, இந்திரஜா, ஜான் விஜய், விதியுலேகா, விஜே பார்வதி, ஷாலு ஷம்மு, அனிகா சுரேந்திரன், சஞ்சனா சிங் ஆகிய 12 போட்டியாளர்கள் கலந்துகொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தொலைகாட்சி நிர்வாகம் விரைவில் அதிகாரப்பூர்வ தகவலை அறிவிக்கவுள்ளது.