மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' |
ஜி தமிழ் தொலைக்காட்சியின் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் புரோமோவை சிவகார்த்திகேயன் வெளியிட்டார். வைரலாகி வரும் இந்த புரோமோவால் நிகழ்ச்சி குறித்தான மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தொலைக்காட்சிகளில் சீரியலுக்கு அடுத்தப்படியாக ரியாலிட்டி ஷோக்களுக்கு இடையேயும் பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் ஜி தமிழும் 'சர்வைவர்' என்கிற பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோவை தற்போது தமிழில் அறிமுகப்படுத்துகிறது.
இந்த போட்டியில் தனி தீவில் விடப்படும் போட்டியாளர்கள் அங்கு நிலவும் சூழ்நிலைகளை சமாளித்து அவர்களே அனைத்தையும் தாக்கு பிடித்து வாழ வேண்டும். மற்ற சேனல்களின் ரியாலிட்டி ஷோக்களை முன்னணி ஹீரோக்கள் தொகுத்து வழங்குவது போலவே, 'சர்வைவர்' நிகழ்ச்சியை ஆக்ஷன் கிங் அர்ஜூன் தொகுத்து வழங்கவுள்ளார். இதன் புரோமோவை சிவகார்த்திகேயன் அண்மையில் வெளியிட்டுள்ள நிலையில் இணையத்தில் வைரலாகி வருகிறது. புரோமோவில் பேசும் அர்ஜூன், 'பரிசு ஒரு கோடி... அதை கஷ்டப்படாமல் ஜெயிக்க முடியாது' என்று கூறுகிறார்.
சர்வைவர் நிகழ்ச்சியில் விஜயலக்ஷ்மி, நந்தா, வனிதா விஜயகுமார், கோபிநாத் ரவி, ஸ்ரீ ரெட்டி, இந்திரஜா, ஜான் விஜய், விதியுலேகா, விஜே பார்வதி, ஷாலு ஷம்மு, அனிகா சுரேந்திரன், சஞ்சனா சிங் ஆகிய 12 போட்டியாளர்கள் கலந்துகொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தொலைகாட்சி நிர்வாகம் விரைவில் அதிகாரப்பூர்வ தகவலை அறிவிக்கவுள்ளது.