'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
பல புதுமையான சீரியல்களையும், நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறது விஜய் டிவி. இந்நிலையில் சமீபத்தில் வெளியான அத்தொலைக்காட்சியின் புதிய சீரியலின் புரோமோ ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
விஜய் டிவியில் "தென்றல் வந்து என்னைத் தொடும்" என்கிற புதிய தொடர் விரைவில் வெளியாகவுள்ளது. அதன் புரோமோவை வெளியிட்டுள்ளனர். அதில் வெளிநாடு சென்று படித்து விட்டு சொந்த ஊருக்கு வரும் நாயகி கோவிலுக்கு வருகிறார். அங்கு கோவிலில் வைத்து தாலி கட்டிக் கொண்ட ஒரு ஜோடியை அந்த ஏரியாவில் சண்டித்தனம் செய்யும் நாயகன் கட்டிய தாலியை பறிக்க முயல, அவரை அடித்து விடுகிறார் நாயகி. அதோடு அம்மன் சாட்சியாக கட்டிய தாலியை நீ எப்படி பறிக்கலாம் என நாயகி கேட்க, ஆத்திரத்தில் கோவிலில் அம்மன் கழுத்தில் இருக்கும் மஞ்சள் கயிறை எடுத்து நாயகியின் கழுத்தில் போட்டு, நெற்றியில் திலகமும் இட்டு, நான் இப்போது இந்த மஞ்ச கயிறை உன் கழுத்தில் போட்டுவிட்டேன், நீ என் பொண்டாட்டியா என கேட்கிறார்.
தென்றல் வந்து என்னைத் தொடும் - விரைவில்.. #ThendralVanthuEnnaiThodum #VijayTelevision #VijayTv pic.twitter.com/K9UpHTpWwu
— Vijay Television (@vijaytelevision) July 25, 2021