என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

பல புதுமையான சீரியல்களையும், நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறது விஜய் டிவி. இந்நிலையில் சமீபத்தில் வெளியான அத்தொலைக்காட்சியின் புதிய சீரியலின் புரோமோ ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
விஜய் டிவியில் "தென்றல் வந்து என்னைத் தொடும்" என்கிற புதிய தொடர் விரைவில் வெளியாகவுள்ளது. அதன் புரோமோவை வெளியிட்டுள்ளனர். அதில் வெளிநாடு சென்று படித்து விட்டு சொந்த ஊருக்கு வரும் நாயகி கோவிலுக்கு வருகிறார். அங்கு கோவிலில் வைத்து தாலி கட்டிக் கொண்ட ஒரு ஜோடியை அந்த ஏரியாவில் சண்டித்தனம் செய்யும் நாயகன் கட்டிய தாலியை பறிக்க முயல, அவரை அடித்து விடுகிறார் நாயகி. அதோடு அம்மன் சாட்சியாக கட்டிய தாலியை நீ எப்படி பறிக்கலாம் என நாயகி கேட்க, ஆத்திரத்தில் கோவிலில் அம்மன் கழுத்தில் இருக்கும் மஞ்சள் கயிறை எடுத்து நாயகியின் கழுத்தில் போட்டு, நெற்றியில் திலகமும் இட்டு, நான் இப்போது இந்த மஞ்ச கயிறை உன் கழுத்தில் போட்டுவிட்டேன், நீ என் பொண்டாட்டியா என கேட்கிறார்.
தென்றல் வந்து என்னைத் தொடும் - விரைவில்.. #ThendralVanthuEnnaiThodum #VijayTelevision #VijayTv pic.twitter.com/K9UpHTpWwu
— Vijay Television (@vijaytelevision) July 25, 2021