ரஜினியின் 'ஜெயிலர்-2' ரிலீஸ் ஜூனிலிருந்து ஆகஸ்ட்டுக்கு மாறுகிறது! | சென்னையில் சீர்காழி கோவிந்தராஜன் பெயரில் சாலை | எம்ஜிஆரின் 'இதயக்கனி' படத்தை பார்த்த எடப்பாடி பழனிசாமி | ராஜமவுலி படத்தை அடுத்து சந்தீப் ரெட்டி வங்கா படத்தில் நடிக்கும் மகேஷ் பாபு! | திருமணத்திற்கு 10 நாளே இருக்கும் நிலையில் ஹிந்தி படத்திலிருந்து வெளியேறிய ராஷ்மிகா! | ரொமாண்டிக் பேண்டசி படமாக உருவாகும் 'டபுள் ஆக்குபன்சி' | காளை அடக்குபவராக விமல் நடிக்கும் 'வடம்' | இசை அமைப்பாளரை மணந்தார் ரோஷினி | பிளாஷ்பேக் : பாக்யராஜை இயக்கிய பாலகுமாரன் | பிளாஷ்பேக்: தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பாலிவுட் நடிகை |

மதன் பாண்டியன் - ரேஷ்மா ஜோடி சின்னத்திரையில் மீண்டும் இணைந்து புதிய சீரியல் ஒன்றில் நடித்து வருகின்றனர்.
ஜீ தமிழ் சீரியலான பூவே பூச்சூடவா தொடரில் நாயகி கதாபாத்திரத்தில் அறிமுகாமானார் ரேஷ்மா. இவர் அதே சீரியலில் நடித்து வரும் மதன் பாண்டியன் என்ற நடிகரை காதலிப்பதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து கடந்த ஜனவரி 1 ஆம் தேதி, புத்தாண்டு அன்று மதனும் ரேஷ்மாவும் தங்கள் காதல் குறித்து வெளிப்படையாக அறிவித்தனர். ஆறு மாதத்தில் திருமணம் இருக்கலாம் எனவும் அறிவித்திருந்தனர். ஆனால், கோவிட் காரணமாக அவர்களது திருமணம் தள்ளிப்போனது.
இந்நிலையில், புதிய சீரியல் ஒன்றில் இருவரும் இணைந்து ஜோடியாக நடித்து வருகின்றனர். கலர்ஸ் தமிழ் சேனலில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் அபி டெய்லர் என்ற சீரியலில் நாயகனாக மதனும், நாயகியாக ரேஷ்மாவும் நடிக்கின்றனர்.
காதலை வெளியுலகிற்கு அறிவித்த பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கும் முதல் சீரியல் இதுதான். ரியலிலும் திரையிலும் ஜோடி சேர்ந்துள்ள மதன் ரேஷ்மாவிற்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.




