'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மதன் பாண்டியன் - ரேஷ்மா ஜோடி சின்னத்திரையில் மீண்டும் இணைந்து புதிய சீரியல் ஒன்றில் நடித்து வருகின்றனர்.
ஜீ தமிழ் சீரியலான பூவே பூச்சூடவா தொடரில் நாயகி கதாபாத்திரத்தில் அறிமுகாமானார் ரேஷ்மா. இவர் அதே சீரியலில் நடித்து வரும் மதன் பாண்டியன் என்ற நடிகரை காதலிப்பதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து கடந்த ஜனவரி 1 ஆம் தேதி, புத்தாண்டு அன்று மதனும் ரேஷ்மாவும் தங்கள் காதல் குறித்து வெளிப்படையாக அறிவித்தனர். ஆறு மாதத்தில் திருமணம் இருக்கலாம் எனவும் அறிவித்திருந்தனர். ஆனால், கோவிட் காரணமாக அவர்களது திருமணம் தள்ளிப்போனது.
இந்நிலையில், புதிய சீரியல் ஒன்றில் இருவரும் இணைந்து ஜோடியாக நடித்து வருகின்றனர். கலர்ஸ் தமிழ் சேனலில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் அபி டெய்லர் என்ற சீரியலில் நாயகனாக மதனும், நாயகியாக ரேஷ்மாவும் நடிக்கின்றனர்.
காதலை வெளியுலகிற்கு அறிவித்த பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கும் முதல் சீரியல் இதுதான். ரியலிலும் திரையிலும் ஜோடி சேர்ந்துள்ள மதன் ரேஷ்மாவிற்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.