கண்ணப்பா சம்பள விஷயத்தில் விஷ்ணு மஞ்சுவை மிரட்டிய மோகன்லால், பிரபாஸ் | மோகன்லால், மம்முட்டி படத்தை முடித்துவிட்டு சல்மான் கானை இயக்க தயாராகும் விஸ்வரூபம் எடிட்டர் | முக்கிய காட்சிகள் கட், பாம்புடன் வந்த ரசிகர் : கலீஜா ரீ ரிலீஸ் கலாட்டா | தமிழ் பாடல்களில் ஆங்கில ஆதிக்கம் : அனுராக் கேள்விக்கு மணிரத்னம் பதில் | கடவுளுக்கு தெரியும் : குழந்தை விஷயம் குறித்து கேட்ட ரசிகருக்கு சாந்தனு பாக்யராஜ் பதிலடி | கேளிக்கை வரி குறைப்பு: திரைத்துறையினர் மகிழ்ச்சி | தள்ளிப்போனது இளையராஜா பாராட்டு விழா | கமல் உடன் முத்தக்காட்சி பற்றி அபிராமி விளக்கம் | சிவனே உத்தரவிட்டு கண்ணப்பா படத்தை எடுத்ததாக உணர்கிறோம் : விஷ்ணு மஞ்சு | 10 வருட சிறந்த படங்களை அறிவித்த தெலுங்கானா அரசு |
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2வது சீசன் மூலம் புகழ்பெற்றவர்கள் அஸ்வின், சிவாங்கி. பொதுவாக பிக் பாஸ், குக் வித் கோமாளி, கலக்க போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் இடையே காதல் மலர்வதும், கல்யாணம் செய்த கொள்வதும் சகஜமான ஒன்று.
அந்த வரிசையில் குக் வித்த கோமாளி 2வது சீசனில் மிகவும் நெருக்கமாக காணப்பட்ட அஸ்வினும், சிவாங்கியும் காதலிப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இருவரும் திருமணம் செய்து கொண்டதாக திருமண வீடியோவுடன் தகவல் வெளியானது. ஆனால் இந்த வீடியோக்கள் மார்பிங் செய்யப்பட்டவை, நாங்கள் காதலிக்கவும் இல்லை, கல்யாணம் பண்ணிக்கொள்ளவும் இல்லை என்று இருவரும் மறுத்திருக்கிறார்கள்.
இதுகுறித்து அஸ்வின் கூறியிருப்பதாவது: எனது திருமணம் பற்றிய தகவல் முற்றிலும் தவறானது மார்பிங் செய்யப்பட்ட சில வீடியோக்கள், படங்கள் இணையத்தில் உலா வருகின்றன. அவை அனைத்தும் எனது பெயரை கெடுப்பதற்காக பரப்பப்படும் தவறான தகவல்கள் என்பதை தெளிவுப்படுத்துகிறேன். எந்த ஒரு சக நடிகையையும் நான் காதலிக்கவில்லை. நான் சிங்கிளாகவே இருக்கிறேன். நான் என்னுடைய சினிமா வாழ்க்கையில் இப்போதுதான் முதல் கட்டத்தில இருக்கிறேன். என்னுடைய தற்போதைய கவனம் வேலையில் மட்டுமே இருக்கிறது. எனக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்னுடைய ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்று கூறியிருக்கிறார்.
சிவாங்கி கூறியிருப்பதாவது: என்னையும் என் சக நடிகர் ஒருவரையும் வைத்து மார்பிங் செய்யப்பட்டு வைரலாகும் படங்கள் உண்மைக்கு புறம்பானவை. அது போன்ற தவறான தகவல்களை யாரும் பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.