ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2வது சீசன் மூலம் புகழ்பெற்றவர்கள் அஸ்வின், சிவாங்கி. பொதுவாக பிக் பாஸ், குக் வித் கோமாளி, கலக்க போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் இடையே காதல் மலர்வதும், கல்யாணம் செய்த கொள்வதும் சகஜமான ஒன்று.
அந்த வரிசையில் குக் வித்த கோமாளி 2வது சீசனில் மிகவும் நெருக்கமாக காணப்பட்ட அஸ்வினும், சிவாங்கியும் காதலிப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இருவரும் திருமணம் செய்து கொண்டதாக திருமண வீடியோவுடன் தகவல் வெளியானது. ஆனால் இந்த வீடியோக்கள் மார்பிங் செய்யப்பட்டவை, நாங்கள் காதலிக்கவும் இல்லை, கல்யாணம் பண்ணிக்கொள்ளவும் இல்லை என்று இருவரும் மறுத்திருக்கிறார்கள்.
இதுகுறித்து அஸ்வின் கூறியிருப்பதாவது: எனது திருமணம் பற்றிய தகவல் முற்றிலும் தவறானது மார்பிங் செய்யப்பட்ட சில வீடியோக்கள், படங்கள் இணையத்தில் உலா வருகின்றன. அவை அனைத்தும் எனது பெயரை கெடுப்பதற்காக பரப்பப்படும் தவறான தகவல்கள் என்பதை தெளிவுப்படுத்துகிறேன். எந்த ஒரு சக நடிகையையும் நான் காதலிக்கவில்லை. நான் சிங்கிளாகவே இருக்கிறேன். நான் என்னுடைய சினிமா வாழ்க்கையில் இப்போதுதான் முதல் கட்டத்தில இருக்கிறேன். என்னுடைய தற்போதைய கவனம் வேலையில் மட்டுமே இருக்கிறது. எனக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்னுடைய ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்று கூறியிருக்கிறார்.
சிவாங்கி கூறியிருப்பதாவது: என்னையும் என் சக நடிகர் ஒருவரையும் வைத்து மார்பிங் செய்யப்பட்டு வைரலாகும் படங்கள் உண்மைக்கு புறம்பானவை. அது போன்ற தவறான தகவல்களை யாரும் பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.