'இட்லி கடை' படத்தின் முதல் பாதி ரெடி! | 'தேரே இஸ்க் மெயின்' படத்தில் பிரபுதேவா? | ரஜினியின் 'கூலி' படத்தின் ஹிந்தி பதிப்புக்கு டைட்டில் மாற்றம்! | தலையில் மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றிய அஜித்குமார்! | கொக்கைன் விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன் | சிம்புவின் 50வது படம் டிராப்பா? | ரசிகர்கள் விரும்பும் படத்தை கொடுக்கவில்லை: 'தக் லைப்' தோல்விக்கு மன்னிப்பு கேட்ட மணிரத்னம் | ஆக் ஷன் ஹீரோக்கள் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : கஜோல் | 'கேம் சேஞ்ஜர்' படத்துக்கு பச்சைக்கொடி காட்டியிருக்க கூடாது: தயாரிப்பாளர் தில் ராஜூ புலம்பல் | தமிழ்த் தலைப்புகளும், ஆங்கிலத் தலைப்புகளும் மோதும் ஜுன் 27 ரிலீஸ் |
தடை செய்யப்பட்ட டிக்டாக் செயலி மூலம் புகழ்பெற்ற பலர் சினிமாவுக்கு வந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் கேப்ரில்லா. முதன் முதலாக விஜய் டி.வியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தோன்றினார். அதன் பிறகு காஞ்சனா 3 படத்தில் சிறிய கேரக்டரில் நடித்தார். ஐரா படத்தில் இளம் வயது நயன்தாராவாக நடித்து புகழ்பெற்றார். தற்போது செத்தும் ஆயிரம் பொன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் சுந்தரி என்ற தொடரில் நாயகியாக நடிக்கிறார். அழகும், நிறமும் இல்லாமல் இருக்கும் கிராமத்து பெண்ணான சுந்தரி. தன் உழைப்பால் எப்படி வாழ்க்கையில் முன்னேறுகிறாள் என்பதுதான் சுந்தரியின் கதை சுருக்கம்.