பராசக்தி படத்தை வெளியிட தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு | பத்து நாள் ராஜாவாக சதீஷ் | சிறிய படங்களின் பிரச்னைகள் தீருமா? | ஜனநாயகன் டிரைலர் நாளை(ஜன., 3) வெளியீடு | புத்தாண்டை முன்னிட்டு எத்தனை படங்களின் அப்டேட் வந்தது தெரியுமா ? | தியேட்டர்களை எதிர்த்து ஓடிடியில் வெளியான 'சல்லியர்கள்' | தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! |

தடை செய்யப்பட்ட டிக்டாக் செயலி மூலம் புகழ்பெற்ற பலர் சினிமாவுக்கு வந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் கேப்ரில்லா. முதன் முதலாக விஜய் டி.வியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தோன்றினார். அதன் பிறகு காஞ்சனா 3 படத்தில் சிறிய கேரக்டரில் நடித்தார். ஐரா படத்தில் இளம் வயது நயன்தாராவாக நடித்து புகழ்பெற்றார். தற்போது செத்தும் ஆயிரம் பொன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் சுந்தரி என்ற தொடரில் நாயகியாக நடிக்கிறார். அழகும், நிறமும் இல்லாமல் இருக்கும் கிராமத்து பெண்ணான சுந்தரி. தன் உழைப்பால் எப்படி வாழ்க்கையில் முன்னேறுகிறாள் என்பதுதான் சுந்தரியின் கதை சுருக்கம்.