மார்ச் 29ல் ‛பொன்னியின் செல்வன் 2' டிரைலர் ரிலீஸ் | 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கும் சத்யராஜ் - ஷோபனா | கீர்த்தி சுரேஷின் பாட்டில் சேலஞ்சை நிறைவேற்றிய நானி - ராணா | நிதின் - ராஷ்மிகா படத்தை துவக்கி வைத்த சிரஞ்சீவி | அப்பா பாரதிராஜாவை இயக்கும் மகன் மனோஜ் | ஐஸ்வர்யா ரஜினியிடம் விசாரணை நடத்த போலீஸ் திட்டம் | செல்பி : போலீசாருக்காக காரை விட்டு இறங்கி வந்த ரஜினி | மும்பையில் குடியேறிய சூர்யா? | மூளையில் ரத்தக்கசிவு : லண்டன் மருத்துவமனையில் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ அட்மிட் | தெலுங்கில் பிசியாகும் ஐஸ்வர்யா மேனன் |
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வந்த நடிகர் சுரேஷ்கோபி, அதன்பிறகு சினிமாவை விட்டு சிலகாலம் ஒதுங்கி அரசியலில் அடியெடுத்து வைத்தார்.. இந்தநிலையில் மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ள சுரேஷ்கோபி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு துல்கர் சல்மானுடன் இணைந்து வரனே ஆவசியமுண்டு என்கிற படத்தில் நடித்திருந்தார். தற்போது அவரது 249 ஆவது படமாக காவல் என்கிற படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் அவர் நடிக்கும் 250வது படமாக 'ஒத்தக்கொம்பன்' என்கிற படம் உருவாக இருக்கிறது.
பிரமாண்டமான படமாக உருவாக இருக்கும் இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் மேத்யூ தாமஸ் என்பவர் தான் இயக்கவுள்ளார். மலையாளத்தில் மோகன்லாலின் புலி முருகன், திலீப்பின் ராம்லீலா உள்ளிட்ட நூறு கோடி வசூலித்த பிரமாண்ட படங்களை தயாரித்த தோமிச்சன் முளக்குப்பாடம் என்பவர் தான் இந்தப்படத்தை தயாரிக்கிறார். இந்தநிலையில் சமீபத்தில் சுரேஷ்கோபியை சந்தித்த தயாரிப்பாளர் தோமிச்சன் விரைவில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படும் என கூறியுள்ளார். மேலும் இயக்குனரும் தானும் சேர்ந்து சுரேஷ்கோபியை சந்தித்த புகைப்படத்தையும் வெளியிட்டு இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.