திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி |
சாமியார் நித்தியானந்தாவை ரகசிய கேமரா மூலம் கண்காணிக்க பிரபல இந்தி சேனல் ஒன்று தயாராகி வருகிறது. ஏற்கனவே ரகசிய கேமராவால் பல சிக்கல்களை சந்தித்தவர் சாமியார் நித்தியானந்தா. தற்போது அந்த சர்ச்சைகள் அடங்கி, மதுரை ஆதீனம் பிரச்னையில் பிஸியாகி விட்டார் நித்தி. இந்நிலையில் அவரை இந்தி டிவி சேனல் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளது. இந்தி டி.வி. சேனலில் பிரபலமான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ நடந்து வருகிறது. பிரபலங்களை அழைத்து வீடு ஒன்றில் தங்க வைப்பார்கள். அவர்களின் வெளி உலக தொடர்புகள் துண்டிக்கப்படும் செல்போன் வைத்துக் கொள்ளவும் அனுமதி இல்லை. அறைக்குள் ரகசிய கேமரா வைத்து அவர்களின் நடவடிக்கைகளை நடுவர்கள் கண்காணிப்பார்கள். இந்த ஷோவில் நடுவராக இந்தி நடிகர் சல்மான்கான் உள்ளார்.
இந்த ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க நித்யானந்தா சாமியாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அழைப்பு வந்ததை நித்யானந்தாவின் உதவியாளர் உறுதிபடுத்தியுள்ளார். ஆனால் ரியாலிட்டி ஷோவில் நித்யானந்தா பங்கேற்பாரா என்பது உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.