வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் |
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வெளியான 'சிக்கந்தர்' படம் அதிர்ச்சி தோல்வியாக அமைந்து விட்டது. இந்த நிலையில் அடுத்தபடியாக மூன்று படங்களை எதிர்நோக்கி இருக்கிறார் ராஷ்மிகா. அதில் முதல் படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுசுக்கு ஜோடியாக அவர் நடித்திருக்கும் குபேரா. ஜூன் மாதம் திரைக்கு வரும் இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகள் அடுத்த வாரத்தில் தொடங்குகிறது. இதில் தனுசுடன் இணைந்து தானும் பல புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க போகிறார் ராஷ்மிகா மந்தனா.
அதையடுத்து பெண்களை மயமாகக் கொண்ட 'தி கேர்ள் ப்ரெண்ட்' என்ற படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது. அதேபோல் ஹிந்தியில் ஆயுஷ்மான் குர்ரானாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்திருக்கிறார். திகில் நகைச்சுவை கலந்த கதையில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகிற டிசம்பர் மாதம் திரைக்கு வருகிறது. இந்த மூன்று படங்களுமே தனக்கு மிகப்பெரிய ஹிட் படங்களாக அமையும் என்று எதிர்பார்ப்பதாக தான் அளித்த ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.