எனக்கு தடை விதிப்பவர்களிடம் ஏன் என்று கேளுங்கள்: ராஷ்மிகா | அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள பூமி பட்னேகர் | பிளாஷ்பேக் : அமிதாப்பச்சன் பட ரீமேக்கில் ஆர்வம் காட்டிய ரஜினி | பழம்பெரும் பாடகி, நடிகை பாலசரஸ்வதி தேவி காலமானார் | நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் |
இயக்குனர் சற்குணம் தயாரிப்பில் நயன்தாரா நடித்த படம் டோரா. சற்குணத்தின் உதவியாளர் தாஸ் ராமசாமி இயக்கினார். மாயா படத்தின் வெற்றிக்கு பிறகு அதே பாணியிலான திகில் பேய் படத்தில் நடித்திருந்தார் நயன்தாரா. அவருடன் தம்பி ராமய்யா, ஹரிஷ் உத்தமன், சுனில்குமார் ஆகியோரும் நடித்திருந்தனர். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருந்தார். விவேக், மெர்வின் இசை அமைத்திருந்தனர்.
சிறுமியை பலவந்தப்படுத்திய ஒரு கொடூரமான கும்பலை, காருக்குள் புகுந்த நாயின் ஆவி ஒன்று நயன்தாரா மூலமாக பழிவாங்குவது தான் கதை. மாயா அளவிற்கு வெற்றி பெறாவிட்டாலும், ஓரளவுக்கு ஓடிய படம். கடந்த மார்ச் மாதம் 31ந் தேதி வெளிவந்த இந்தப் படம் 5 மாதங்களுக்கு பிறகு சின்னத்திரையில் ஒளிபரப்பாகிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வருகிற 17ந் தேதி ஞாயிற்றுக் கிழமையன்று மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாகிறது.