தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்: புதிய தலைவராகும் ஜி.கே.எம். தமிழ்குமரன் | மீண்டும் ‛தி ராஜா சாப்' பட நிறுவனத்துடன் இணையும் பிரபாஸ்! | சிகிச்சைக்கு பிறகு அடியோடு மாறி விட்டேன்! -‛பாகுபலி' வில்லன் ராணா | பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிடம் 10 கோடி கேட்டு மிரட்டல்! | ‛டிராகன்-2' அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்- அஸ்வத் மாரிமுத்து! | 70வது பிலிம்பேர் விருதுகள் - அதிக விருதுகளை வென்ற 'அமரன்' | இது கமல் ரஜினி பட கணக்கு | சிறிய பட்ஜெட் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி! | ‛கல்கி 2898 ஏ.டி' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | பிரதீப் ரங்கநாதன் இயக்குனருடன் கைகோர்க்கும் சிம்பு! |

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பகல் நிலவு தொடரில் ஜோடியாக நடித்து வருகிறவர்கள் சமீராவும், அன்வரும். இருவரும் நிஜத்திலும் காதலர்கள். தற்போது இருவரும் இணைந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் றெக்க கட்டி பறக்குது மனசு என்ற தொடரை தயாரித்து ஒளிபரப்புகிறார்கள். இதில் சித்தார்த் ஹீரோவாக நடிக்கிறார். சமீரா ஹீரோயினாக நடிக்கிறார். அன்வர் தயாரிப்பு பணிகளை கவனித்துக் கொள்கிறார்கள்.
இந்த தொடர் மராட்டி மொழியில் ஒளிபரப்பான ஒரு காதல் தொடரின் ரீமேக் ஆகும். இதன் படப்பிடிப்புகள் தற்போது சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கான புரமோ பாடலை சினிமா பாடலுக்கு நிகராக படம் பிடித்திருக்கிறார்கள். இந்த தொடர் வருகிற 19ந் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. திருமணமே வேண்டாம் என்று இருக்கும் ஒரு ஆஞ்சநேய பக்தனுக்கும், மனசெல்லாம் காதல் நிறைந்திருக்கும் ஒரு டீச்சருக்குமான காதல் கதை இது.