2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' | ஓடிடியில் நேரடி படங்கள், வெப் தொடர்கள் அறிவிப்பு | நடிப்பில் விக்ரமை வெல்ல தொடர்ந்து போராடுவேன்: துருவ் விக்ரம் | அம்மாவின் பச்சை நிற கண்ணை பெற்ற அழகான மகள்: அக்ஷராவுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து | பிளாஷ்பேக்: கதை நாயகனாக முதல் படத்தில் தோற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன் | நாற்று நட்டேன், செங்கல் சூளையில் வேலை செய்தேன்: அனுபமா பரமேஸ்வரன் | 35 நாளில் முடிந்த 'டூரிஸ்ட் பேமிலி' அபிஷன் படம் |
சின்னத்திரையில் மெட்டி ஒலி, அண்ணாமலை, நம்பிக்கை, அகல்யா, மனைவி, திருமதி செல்வம், கலசம், சிவசக்தி, துளசி உள்பட பல சீரியல்களில் ஹீரோ, வில்லன் என மாறுபட்ட வேடங்களில் நடித்தவர் சஞ்சீவ். தற்போது யாரடி நீ மோகினி சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார். அதேபோல், சந்திரலேகா, நிலாவே வா, பத்ரி ஆகிய படங்களில் விஜய்யின் நண்பனாக நடித்துள்ள சஞ்சீவ், என் மனவானில், புதிய கீதை, நெஞ்சிருக்கும் வரை உள்ளிட்ட படங்களில் கேரக்டர் ரோல்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், சமீபகாலமாக சின்னத்திரையில் பிரபலமானவர்கள் பலரும் சினிமாவில் ஹீரோவாகிக் கொண்டிருப்பதால், சஞ்சீவுக்கும் சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை ஏற்பட கடந்த ஒரு வருடமாக எந்த சீரியலிலும் நடிக்காமல், சினிமா வாய்ப்புக்காக முயற்சி செய்து வந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி சரியான பட வாய்ப்பு கிடைக்கவில்லையாம். அதனால் தற்போது யாரடி நீ மோகினி தொடர் மூலம் மீண்டும் தனது சீரியல் பயணத்தை தொடங்கி விட்டார் சஞ்சீவ்.